Quantcast
Channel: சந்தித்ததும் சிந்தித்ததும்
Viewing all 3194 articles
Browse latest View live

பூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம்

$
0
0


 வாங்கண்ணா வணக்கங்கண்ணா....  
வரவேற்பு தரும் பூ யானை!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைநகரின் மெஹ்ரோலி பகுதியில் இருக்கும் Garden of Five Senses சென்றிருந்தோம். 28-வது Garden Tourism Festivalதில்லி அரசின் சுற்றுலாத் துறை அங்கே நடத்தியது தான் காரணம். அது பற்றிய செய்தியை படித்தவுடனே அங்கே செல்ல வேண்டும் என நினைவில் கொண்டேன். மறந்து விடுவேன் என்பதால் அலைபேசியிலும் குறித்து வைத்துக் கொண்டேன்! நண்பர் பத்மநாபன் அவர்களுக்கும் தகவல் தந்திருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று அழகழகான பூக்களைக் கண்டு ரசித்தது மனதில் ஓடியதும் ஒரு காரணம்.

 சிங்கத்தின் வாலை கொஞ்சம் உற்று நோக்குங்கள்! அட ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் தான் சிங்கத்தின் வால்!

மூன்று தினங்கள் மட்டும் தான் இந்த விழா – அதாவது வெள்ளியிலிருந்து ஞாயிறு வரை – வெள்ளி அன்று அலுவலகம் உண்டு, ஞாயிறு சென்றால் அதிகம் கூட்டம் இருக்கும், அதனால் சனிக்கிழமை செல்வதாகத் திட்டம். அலுவலகத்திலிருந்து அழைப்பு வராமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே, சில வீட்டு வேலைகளை முடித்து விட்டு புறப்படலாம் என முடிவு செய்தபோது பத்மநாபன் அண்ணாச்சியிடம் இருந்து அலைபேசி அழைப்பு – “அது என்ன கார்டன் சொன்னீங்க, மறந்து போச்சு!


கூரிய பார்வையோடு கழுகு வரவேற்கிறது...
 
அவருக்கு கார்டன் பெயரைச் சொல்லி விட்டு, நானும் புறப்பட்டுக் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, “வீட்டுக்கு வந்துடுங்க, சேர்ந்தே போலாம்!என்று சொல்ல அவரது இல்லத்திற்குச் சென்றேன்.  மதிய உணவினை அங்கே முடித்துக் கொண்டு ஆட்டோவில் Garden of Five Sensesசென்றோம். விழாவினை ஏற்பாடு செய்திருந்த தில்லி சுற்றுலாத் துறை சாகேத்மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து Free Shuttle ஏற்பாடு செய்திருந்தார்கள்.  நாங்கள் ஆட்டோவில் சென்றதால் நேரே அங்கே சென்று விட்டோம்.

 இயற்கை வரைந்த ஓவியமோ?

நுழைவு வாயிலிலிருந்து சற்றே தொலைவு வரை தான் ஆட்டோக்களுக்கு அனுமதி. அங்கே இறங்கிக் கொண்டு நடந்து உள்ளே நுழைந்தோம். சனிக்கிழமை என்றாலும் மக்கள் நிறையவே வந்திருந்தார்கள். Parking பகுதியில் நின்றிருக்கும் கார்களின் எண்ணிக்கை பார்த்தபோதே பிரமிப்பாக இருந்தது. இத்தனைக் கூட்டமா, பூக்களை நிதானமாக பார்த்து ரசிக்க முடியுமா, புகைப்படங்களை தடை இல்லாது எடுக்க முடியுமா? என்ற கேள்விகள் மனதிற்குள் ஓட நுழைவாயிலை நோக்கி நடந்தோம்.



நுழைவாயிலின் அருகே ஒரு வெளிநாட்டு ஜோடி ஒருவரை ஒருவர் தழுவியபடி கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். யார் யாருக்கு என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயம். யார் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை. எங்களுக்கும் கவலையில்லை! அது அவர்களது நாட்டு வழக்கம் என்ற நினைவுடன் நுழைவுச்சீட்டு வாங்குமிடத்திற்குச் சென்றேன். பெரியவர்களுக்கு 30 ரூபாய், 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் 10 ரூபாய். கேமராவிற்கு 50 ரூபாய், 6 ரூபாய் Service Tax – நான்கு ரூபாய் கண்டிப்பாகத் திருப்பிக் கிடைப்பதில்லை!மொத்தமாக 150 ரூபாய் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.


கட்டிப்போட்டு வளர்க்கப்பட்ட போன்சாய் மரம்....

நுழைவாயிலின் அருகிலேயே உள்ளே பூக்கள் கொண்டு அழகிய உருவங்களைச் செய்து வைத்திருந்தார்கள். ஆங்காங்கே சிறுவர்களுக்கான Magic Show, Puppet Show, நடனங்கள் என ஏற்பாடு செய்திருந்தார்கள்.  கூடவே உணவுக் கடைகளும் – அது இல்லாமல் எப்படி விழா நடத்த முடியும்! ஒவ்வொரு கடையிலிருந்தும் விதம் விதமான வாசனைகள் – பூக்களின் வாசனைகளை அடித்து வீழ்த்திவிடும் அளவிற்கு! – நல்ல வேளை அக்கடைகளுக்கென தனிப் பகுதி ஒதுக்கி இருந்தார்கள். இல்லையெனில் பூக்களின் வாசங்களை உணர்ந்திருக்க முடியாது!



எத்தனை எத்தனை பூக்கள் – அப்பாடி கண் கொள்ளாக் காட்சிகள். Bonsai மரங்கள், Cactus செடிகள், Tray Garden, Hanging Garden, தொட்டிகளில் பூக்கள், காய்கறிகள் என பல விதங்களில் தோட்டக்கலையை நீங்கள் இங்கே ரசிக்க முடியும். நெரம் போவது தெரியாமல் நீங்கள் பூக்களை ரசித்துக் கொண்டிருக்கலாம். பூக்களில் தான் எத்தனை எத்தனை வகைகள், வண்ணங்கள்.  பூக்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பது நிச்சயம் நமக்கு மன அமைதியைத் தரும்.




சாதாரண நாட்களில் இங்கே செல்வது, குறிப்பாக குழந்தைகளுடன் செல்வது நல்லதல்ல – காதல் ஜோடிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும். இது போன்று Festival சமயங்களில் சென்றால் அவர்களின் எண்ணிக்கை சற்றே குறைவாக இருக்கும். எத்தனை கூட்டம் இருந்தால் என்ன, என்றபடி ஜோடி ஜோடியாக இருந்த சில காதலர்கள் தோட்ட வளாகத்தில் இருக்கும் மறைவான இடங்களை நோக்கி படையெடுத்தது! அவர்கள் வேலை அவர்களுக்கு!



நிறைய நேரம் நடந்து அங்கே பூக்களை ரசித்து விட்டு, உணவுச் சாலை பக்கம் வந்தோம். அங்கே இருந்த ஒரு உணவுப் போருளைச் சுவைத்தோம் – அது பிறிதொரு சமயத்தில் சாப்பிட வாங்கபகுதியில் வரும்! சுற்றி சுற்றி வந்து கால் வலிக்க, சற்றே இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்து Coffee அருந்தினோம். முப்பது ரூபாய்க்கு MachineCoffee– அவர்கள் சொன்னால் தான் தெரிகிறது அது காபி என! அத்தனை அழகு!



இப்படியாக ஒரு சனிக்கிழமை பூக்களை ரசிப்பதில் சென்றது. பூக்கள்,பூக்கள் என நிறைய பூக்கள் – ஒவ்வொன்றையும் படம் எடுப்பதிலும் கவனம் செலுத்தினேன்.  அங்கே எடுத்த படங்கள் மொத்தமாக 224 – அத்தனையும் இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். இன்றும் நாளையும் சில படங்களை மட்டும் எனது வலையில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் – மற்ற படங்கள்? என்று கேட்பவர்களுக்கு பதில் நாளை!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பூமகள் ஊர்வலம் …..

$
0
0


நேற்று பூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம்பதிவில் சொன்ன மாதிரியே இன்றும் பூக்களின் ஊர்வலம் தான். நடுநடுவே சில Cactus, Bonsai செடிகளும் வரலாம்! ஆனாலும் நிறைய பூக்கள் என்பதால் பூமகள் ஊர்வலம் என்று சொல்லலாமே! நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் சற்றே மேலுள்ள சுட்டியின் மூலம் அதையும் படித்து விட்டு வரலாமே!


வரவேற்கும் பொம்மை
 

குழந்தைக்கு உணவு ஊட்டும் அம்மா.....


வாங்க வாங்க... முழுதும் பூக்களால் செய்யப்பட்டிருக்கிறேன் நான் எனச் சொல்லும் பொம்மை....


வண்ணம் கொண்ட வெண்ணிலவே......


டேலியா... டேலியா.... சொக்க வைக்கும் டேலியா....


இந்த போன்சாய் மரத்தின் வயது 35 என எழுதி வைத்திருந்தார்கள்......


இதன் வயது பத்து!


இன்னுமொரு டேலியா....


பூவே உன் பெயர் என்னவோ?


பிங்கி பேபி







கார்னேஷன்!


ஹை.... பூவுக்குள் பொம்மை....


ஒரு வகை கள்ளிச் செடி....





சரி இன்றைய படங்களைப் பார்த்து விட்டீர்களா?  அங்கே எடுத்த படங்களிலிருந்து வெகு சில படங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாப் படங்களையும் இங்கே வெளியிடலாம் என்றால், பக்கம் திறப்பதற்கே நேரம் எடுத்து உங்களை கஷ்டப்படுத்தும். அதனால் எல்லாப் படங்களையும் ஒருங்கே எனது Flickr பக்கத்தில் தரவேற்றம் செய்திருக்கிறேன். அங்கே நீங்கள் எல்லாப் படங்களையும் பார்க்க முடியும். அதற்கான சுட்டி கீழே.....

https://www.flickr.com/photos/115538736@N06/sets/72157651210502051/



என்ன நண்பர்களே, இப்பதிவில் பகிர்ந்த படங்களையும் Flickr பக்கத்தில் சேமித்திருக்கும் படங்களையும் பார்த்து ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.



நெடுஞ்சாலை உணவகத்தில் ப்யாஜ் பராட்டா

$
0
0


தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 3

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 12

 படம்: இணையத்திலிருந்து....

கர்னால் நகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஓட்டுனர் ஜோதி வண்டியை நிறுத்திய பின் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உணவகத்திற்குள் சென்றோம். வண்டிக்குள் இருந்த வரை குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை.  நெடுஞ்சாலையில் வெட்ட வெளியில் இருந்த உணவகத்தின் அருகே அப்படி ஒரு குளிர்ந்த காற்று. பார்க்கும் மக்கள் அனைவருமே ஒரு பெரிய மூட்டைக்குள் இருப்பது போல இருக்கிறார்கள் – எங்களையும் சேர்த்து தான்.

 உணவகத்தின் நுழைவாயில்....

வெளியிலேயே நாற்காலிகளும் மேஜைகளும் போட்டு இருந்தாலும் கண்ணாடித் தடுப்புகள் அமைத்திருந்த உட்புறத்திற்குத் தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள்.வெளியில் அடிக்கும் குளிர்காற்றிலிருந்து தப்புவது தான் அனைவரின் குறிக்கோளாக இருந்தது.  நாங்கள் வந்திருந்த அதே சமயத்தில் பல வண்டிகள் வெளியே வந்திருந்தன. 

அங்கே பல உணவகங்கள் வரிசையாக இருக்கும். அதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது ZHILMIL DHABAஎனும் உணவகம். சில வருடங்களுக்கு முன்னரே ஒரு பயணத்தில் அங்கே சாப்பிட்ட அனுபவம் உண்டு. கூடவே ஜோதியும் இங்கே சாப்பிடலாம் என்று பரிந்துரைக்க அந்த உணவகத்தினைத் தேர்ந்தெடுத்தோம். பெரும்பாலும் வட இந்தியாவில் காலை உணவாக பராட்டா தான் கிடைக்கும். இங்கேயும் அதே.

என்ன இருக்கு?என்ற கேள்வியே தேவையில்லை – இருந்தாலும் கடமைக்கு கேட்டு வைத்தோம். வரிசையாக “ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா, பனீர் பராட்டா, மூளி பராட்டா, கோபி பராட்டா, மேத்தி பராட்டாஎன்று அவர் அடுக்கிக்கொண்டே போக, சிலர் ஆலு பராட்டா, சிலருக்கு ப்யாஜ் பராட்டா, சிலர் பனீர் பராட்டா எனச் சொல்லி பணியாளியைக் குழப்பி விட்டோம்.  எல்லோரும் சொல்லச் சொல்ல அவர் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை! 

 டம்ப்ளருக்குள் பச்சை மிளகாய்....  பராட்டா ஒரு வாய்... மிளகாய் ஒரு கடி! ஆஹா என்ன ருசி!

சரி எத்தனை எத்தனை பராட்டாக்கள், என்ன வகை என்று சொல்லிய பின்னும் அவர் கைவிரல்களால் எண்ணிய படியே சென்று கொண்டிருந்தார். அதற்குள் வேறொரு பணியாள் எங்கள் அனைவருக்கும் தட்டு, டம்ளர் போன்றவற்றையும் சிறிய கண்ணாடி டம்ளரில் போட்டு வைத்திருந்த பச்சை மிளகாய்களையும் கொண்டு வைத்தார்.  கூடவே ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஊறுகாய் Blister Pack, Butter Paper-ல் மடித்த வெண்ணை வைத்தார்.  கூடவே எலுமிச்சை பிழிந்த முள்ளங்கி, வெங்காயம், மேலே தூவிக்கொள்ள உப்பு, மிளகுத் தூள் என வைத்து விட்டுச் சென்றார்.

 நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது எடுத்த படம் - இவர் தௌ. தேவிலால்!

உள்ளே இருந்து பராட்டா வருவதற்குள் வெங்காயம், முள்ளங்கி எல்லாம் காலி ஆனது! சுடச் சுட பராட்டா வர வேண்டுமே! பிறகு பராட்டா வர, ஒவ்வொருவராய் அவரவர் கேட்ட பராட்டாவினை கொடுத்திருந்த வெண்ணையை அதன் மேல் தடவி, தயிர் மற்றும் ஊறுகாய் தொட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டினோம்.  ஒரு சிலர் ஒரு பராட்டாவிலேயே வயிறு நிரம்பியதாய்ச் சொல்ல, என்னைப் போல சிலர் மட்டும் இன்னும் ஒரு பராட்டா சாப்பிட்டோம் – முதலில் சாப்பிட்டது ப்யாஜ் பராட்டா, இரண்டாவதாக பாதி ஆலு பராட்டா, பாதி பனீர் பராட்டா! இரவு வரை தாங்க வேண்டுமே! ஏனெனில் பராட்டா சாப்பிடும்போதே மணி 11.45!

 குளிர் தாங்கலை! Atleast ஒரு சாக்காவது குடுத்தாங்களே... என்று யோசிக்கும் பைரவர்..

இப்படியாக அவரவர்களுக்குத் தேவையானதை சாப்பிட்டு முடித்தபின் அனைவரின் ஏகோபித்த வாக்களிப்பில் அந்த உணவகத்திற்கு நல்ல பெயர். உணவும் பிடித்திருந்தது எனச் சொல்லி விட அடுத்தது என்ன என்று கேட்க, குளிருக்கு இதமாய் ஒரு தேநீர் என்பதே அனைவரின் குரலாகவும் இருந்தது! பொதுவாகவே ஹரியானாவில் பால் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல Thick-ஆன எருமைப் பால்! தண்ணீர் கலப்பது இல்லை. அதனால் தேநீரும் நன்றாக இருக்கும். அனைவரும் தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட்டோம்.

 தேக்கு மரங்கள்.....

இந்தப் பயணம் முழுவதும் என்னைக் கவர்ந்த விஷயம் பசுமையான வயல்வெளிகள் – பல இடங்களில் கடுகு, கரும்பு, கோதுமை எனப் பயிரிட்டு இருந்தார்கள். கூடவே பல வயல்களின் ஓரங்களில் தேக்கு மரங்கள். மரங்களை வைத்து விட்டு சில வருடங்கள் காத்திருந்தால் நல்ல சாகுபடி. பராமரிப்பு என பெரிதாய் ஒன்றுமில்லை.  சாலையில் பயணித்தபடியே பல இடங்களில் இப்படி தேக்கு மரங்களைப் பார்க்க முடிந்தது.

பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். அந்த பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பதிவாகச் சொல்லி விட்டால் என்னாவது! :)

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

சாப்பிட வாங்க: பேட்மி பூரி!

$
0
0


படம்: இணையத்திலிருந்து.....

சாதாரணமா பூரின்னா கோதுமை மாவுல செஞ்சு சாப்பிடுவாங்க... இல்லைன்னா மைதா சேர்த்து சோளா பூரி என்று சாப்பிடுவது நம் வழக்கம். ஆனால் வட இந்தியாவில் பேட்மி [Bedmi] பூரி என்றும் ஒன்று உண்டு. தில்லியின் சாந்த்னி சௌக் பகுதிகளில் இப்படி பேட்மி பூரி கிடைக்கும். சென்ற ஞாயிறன்று நண்பர் ஒருவர் இன்னிக்கு வீட்டுல பேட்மி பூரி செய்யப் போறாங்க! உங்களுக்கும் சேர்த்து தான் – கண்டிப்பா வந்துடுங்க! என்று சொன்னார்.

நானோ காலையிலேயே சாதம் வைத்து சீரக ரசம்– அதாங்க நம்ம உமையாள் காயத்ரி ஜி பதிவில் சொன்ன மாதிரி செய்து பார்க்கலாம் என அதற்கான தயாரிப்பில் இறங்கி இருந்தேன். அதை ராத்திரி செய்து சாப்பிடுங்க, இப்ப இங்கே வந்துடுங்க என அழைப்பு பலமாய் இருக்க, நானும் சரி என்று சொல்லி விட்டேன். பேட்மி பூரி சாப்பிட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது என்பதும் ஒரு காரணம். சரி என்று நான் செய்த சாதத்தினை எடுத்து வைத்து விட்டு, அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டேன்.

சென்று என்ன செய்தேன் எனக் கேட்கக் கூடாது – நல்ல ரவுண்டு கட்டி தொட்டுக்கையாக கொடுத்திருந்த உருளைக்கிழங்கு சப்ஜி, ராய்த்தா, மற்றும் சலாட் உடன் ஏழு எட்டு பூரிகளை உள்ளே தள்ளினேன். அட நீங்க மட்டும் நல்லா சாப்பிட்டு வந்தா எப்படி, எங்களுக்கு தரதான் முடியாது, எப்படிச் செய்வதுன்னு சொல்லவாது செய்யலாம் இல்லஎன நீங்கள் கேள்விக்கணைகளை வீசும் முன்னரே நானே சொல்லி விடுகிறேன்.

சரி இந்த பேட்மி பூரி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.....



படம்: இணையத்திலிருந்து.....


பொதுவாக குளிர் காலத்தில் இந்த பேட்மி பூரி செய்வது இங்கே வழக்கம். சாதாரண நாட்களிலும் கிடைக்கும் என்றாலும், குளிர் காலத்தில் தான் அதிகம் கிடைக்கும்.  வடக்கில் இந்த வகை பூரி செய்வதற்கென்றே, கோதுமை மாவு போலவே பேட்மி பூரி  மாவும் தனியாக கிடைக்கும்.  ஆனால் நமது ஊரில் இம்மாவு கிடைப்பது கடினம் என்பதால் நீங்கள் தடுமாற வேண்டாம். அதற்கும் வழி உண்டு. 

தயாரிக்க ஆகும் நேரம்: 2 மணி நேரம்.
சமைக்க ஆகும் நேரம்:சுமார் 30 நிமிடங்கள்.
எத்தனை பேர் சாப்பிடலாம்?  சுமார் நான்கு பேர்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [இரண்டு கப்], வறுத்த ரவை [அரை கப்], பாசிப்பருப்பு [ஒரு கப்], இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் 5, கொத்தமல்லிப் பொடி 1 தேநீர் கரண்டி, மஞ்சள் பொடி 2 தேநீர் கரண்டி, மிளகாய்த் தூள் காரத்திற்கு வேண்டியபடி மற்றும் உப்பு தேவையான அளவு.  பொரிக்கத் தேவையான அளவுக்கு எண்ணை அல்லது நெய்.

எப்படிச் செய்யணும் மாமு?

பருப்பினை இரண்டு மணி நேரம் அளவு ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டிவிட்டு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி பொடி உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

பிறகு கோதுமை மற்றும் ரவையைச் சேர்த்து அதில் கொஞ்சம் எண்ணை சேர்த்துக் கொண்டு அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.  தேவையெனில் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம். பூரி பதத்திற்கு பிசைந்து வைத்து அதை மூடி வைத்து விடவும். அரை மணி நேரம் இப்படி வைத்து விட்டு, உருளைக்கிழங்கு சப்ஜி, சட்னி போன்றவற்றையும் செய்து கொள்ளலாம்.  

மாவினை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து பூரிகளாக இட்டுக் கொள்ளுங்கள்.  வாணலியில் எண்ணை வைத்து நன்கு சுட்ட பிறகு, ஒவ்வொரு பூரியாக அதில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து விடுங்கள். எண்ணைக்குள் பூரியைப் போடும்போது கவனம் தேவை என்பதை சொல்லவும் வேண்டுமோ? தொட்டுகையாக உருளைக்கிழங்கு, சட்னி என அசத்தலாக இருக்கும் இந்த பேட்மி பூரி!

இந்த ஊற வைத்து அரைக்கிற வேலையெல்லாம் நமக்கு ஆகாதுஎன்று சொல்பவர்கள் “பேட்மி பூரி மாவுகிடைக்கிறதா என்று பார்த்து, கோதுமை மாவு போலவே இந்த மாவினை தண்ணீர் சேர்த்து பிசைந்து பூரியாக பொரித்துக் கொள்ளலாம்.

என்ன நண்பர்களே இந்த வாரம் உங்கள் வீட்டில் பேட்மி பூரி தானே!

மீண்டும் வேறு ஒரு அனுபவம்/உணவு வகையோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

பாய்ஸ் பட செந்தில் – தில்லியில்!

$
0
0


பாய்ஸ் படத்தில் நடிகர் செந்தில் நடித்த ஒரு காட்சி வரும் – உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி நினைவில்லையெனில் உங்களுக்காகவே காணொளி இங்கே.....



எந்த இடத்தில் என்று என்ன பிரசாதம்/உணவு கிடைக்கும் என ஒரு டேட்டாபேஸே வைத்திருப்பார். அதை தனது மூலதனம் என்றும் பெருமையாகச் சொல்வார். அதே போல தில்லியில் ஒருவர் இருக்கிறார்.  இவர் உருவத்தில் செந்திலைப் போல இல்லாமல் ஒல்லியாகத் தான் இருப்பார். ஆனால் டேட்டாபேஸ் மட்டும் செந்திலின் டேட்டாபேஸை விட அதிகமாய் விவரங்கள்! அவர் சொல்வது போல Information is Wealth என்பதில் இவருக்கு அதீத நம்பிக்கை போலும்.

தில்லியின் எந்தப் பகுதியில் எந்த நிகழ்வு – குறிப்பாக தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு இவரைப் பார்க்க முடியும். தில்லியில் பல நிகழ்ச்சிகளை தமிழர்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது இந்நிகழ்ச்சிகளுக்கு எனக்கும் அழைப்பு வருவதுண்டு. அதில் பெரும்பாலானவற்றை நான் தவிர்த்து விடுவது வழக்கம் – அலுவலக ஆணிகள் ஒரு காரணம் – இன்னொன்று புதியதாய் ஒரு இடத்திற்குச் செல்வதில், அதுவும் தனியாகச் செல்வதில் இருக்கும் தயக்கம்!


படம்: இணையத்திலிருந்து....

கிட்டத்தட்ட கடந்த இரண்டு மூன்று வாரங்களில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். ஒன்று எங்கள் பகுதியிலேயே நடந்த நிகழ்ச்சி. மற்றொன்று ராமகிருஷ்ண புரத்தில் இருக்கும் மலைமந்திரில் நடந்த நிகழ்ச்சி. இரண்டு இடங்களிலும் தலைநகர் செந்திலைப் பார்த்தேன். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தார் அவர்.  குறிப்பாக சாப்பாட்டு வேளைகளிலும், உணவு வேளைகளிலும்.  பாய்ந்து பாய்ந்து போய் காபி குடிப்பதும், சிற்றுண்டி வகைகளை ஒரு கை பார்ப்பதுமாக இருந்தார்.


படம்: இணையத்திலிருந்து....

எங்கள் பகுதியில் இரண்டு நாட்கள் விழா. புகைப்படங்கள் எடுக்கும் பணியை எனக்கு அளித்திருந்ததால் முழுவதும் அங்கேயே தான் இருந்தேன். அந்த இரண்டு நாட்களும் ஒரு விஷயத்தினை கவனித்தேன் – காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் மட்டும் கிட்டத்தட்ட முப்பது காபி குடித்திருப்பார். யார் காபி அருந்தச் சென்றாலும், அவருடன் இவரும் ஆஜர். For Company sakeகுடிப்பதாக இருந்தாலும், இத்தனை காபி குடிப்பது அவருக்கு எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை. சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று காபி குடித்தாலே எதிர்த்துக் கொண்டு வரும்! இவருக்கு ஒன்றும் செய்யாது போலும்!

மாலையில் பஜ்ஜி – அது பாட்டுக்கு பத்து பன்னிரெண்டு என உள்ளே அனுப்பிக் கொண்டே இருக்கிறார்! கூடவே தேநீர் கப் கப்பாக உள்ளே அனுப்புகிறார்! ஒரு வேளை அடைத்துக்கொள்ளாமல் இருக்க குடிப்பாரோ? மதிய உணவு எல்லோருக்கும் போடும்போதும் பார்த்தேன் – பந்தி முடிந்து கடைசியில் தான் எழுந்திருக்கிறார். இத்தனை சாப்பிட அவரால் எப்படி முடிகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்திருந்த இன்னொரு நண்பரும் சொன்னார் – இவரை சாப்பாட்டு விஷயத்தில் அடித்துக்கொள்ளவே முடியாது என்றும், தில்லியில் எல்லா தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் இவரைக் கண்டிப்பாக பார்க்க முடியும் என்று சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை – ஒரு வேளை அதிகப்படுத்திச் சொல்கிறாரோ என நினைத்தேன். மூன்றாவதாக இன்னொரு நபரும் இவரைப் பற்றிச் சொன்னதும் தான் புரிந்தது இவரிடம் இருக்கும் டேட்டாபேஸ் ரொம்பவே பக்கா என்று.

இப்படி பக்காவாக ஒரு டேட்டாபேஸ் வைத்துக் கொண்டு இருக்கும் இவருக்கு என்றைக்கும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம். அதிலும் சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு ஈடுபாடு இருப்பதால் தான் இவர் இப்படி விவரங்களைச் சேகரித்து ஒவ்வொரு இடமாக சென்று வருகிறார் போலும். 

மலை மந்திர் கோவிலில் நாங்கள் சென்று சேரும் நேரம் தான் காபி பக்கெட்டோடு ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாரோ இல்லையோ, நாலு கால் பாய்ச்சலில் இவர் அவர்களை நோக்கி ஓட, அவர்களோ, முதலில் பாட்டுப் பாடுபவர்களுக்குத் தான் என்று சொல்லியபடி அரங்கத்தினை நோக்கி ஓட, இவர் விடாது துரத்த, ஒரே களேபரம். அவர்களைத் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். ஆனாலும் பாட்டு பாடுபவர்களுக்கு கொடுத்து முடித்தபோது வாளி காலி! இவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக அவர்களைத் தொடர்ந்து சமையலறை வரை சென்று ஒரு காபியை வாங்கி வெற்றிக் களிப்புடன் தான் வந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

என்னதான் சாப்பாட்டு விஷயத்தில் அதீத ஆர்வம் என்றாலும், ஒரு அளவிற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்பது எப்போது அவருக்குப் புரியுமோ?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஃப்ரூட் சாலட் – 129 – மரம் வளர்ப்போம் – தீக்குச்சி! – பதட்டம் தவிர்ப்போம்

$
0
0


இந்தவாரசெய்தி:


ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமுந்த் மாவட்டம்.  அதில் ஒரு கிராமம் தான் பிப்ளாந்த்ரி.  இப்படி ஒரு பேரைக் கூட நாம் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம் தான்.  ஆனாலும் சத்தமில்லாமல் ஒரு புரட்சியினைச் செய்து வருகிறார்கள் அக்கிராமத்து மக்கள். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்-பெண் விகிதாசாரம் மிகவும் குறைவு. பெண் சிசுக்கொலை மிகவும் அதிகம்.

சமீபத்தில் கொண்டாடிய மகளிர் தினம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலை தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகிறார்கள்.  கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கிறார்கள்.  குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கிறார்கள்.

அது மட்டுமல்லாது கிராமப் பஞ்சாயத்து பத்தாயிரம் ரூபாயும், ஊர் மக்கள் அனைவருமாகச் சேர்ந்து 21000/- ரூபாயும் போட்டு ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்த உடன் அக்குழந்தையின் பெயரில் வைப்பு நிதியாக வங்கியில் சேமிக்கிறார்கள். இதனைப் பெற பெண் குழந்தைகள் செய்ய வேண்டியது இது தான் – குழந்தையை வளர்ப்பது போலவே மரங்களையும் வளர்க்க வேண்டும், பெண் சிசுவினை வதம் செய்யக் கூடாது மற்றும் தனது பெண்ணிற்கு 18 வயது ஆகும் வரை அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்ககூடாது. 

பஞ்சாயத்து தலைவர் மாறினாலும், இந்தத் திட்டத்தினை  தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தவுடன், மற்ற கட்சி ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கி விடும் அரசுகள் மத்தியில் இக்கிராமத்து பஞ்சாயத்து இப்படி நல்ல திட்டத்தினை முடக்காமல் இருப்பதற்காகவே இவர்களை பாராட்டலாம்.

கடந்த எட்டு வருடங்களில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து வருகிறார்களாம்.

பெண் சிசு வதை குறைந்த பிறகு இக்கிராமத்தில் ஆண்-பெண் விகிதாசாரத்திலும் நல்ல முன்னேற்றம். 18 வயதிற்குள் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதும் குறைந்திருக்கிறது.
 
சத்தமில்லாமல் சாதித்து வரும் இக்கிராம மக்கள் அனைவருக்கும் இந்த வார பூங்கொத்து.

இந்தவாரமுகப்புத்தகஇற்றை:

HURTING SOMEONE CAN BE AS EASY AS THROWING A STONE IN THE SEA. BUT DO YOU HAVE ANY IDEA HOW DEEP THE STONE CAN GO?

இந்தவாரகுறுஞ்செய்தி:

தோல்வி எனும் தீக்குச்சியை உரசிப்பார்.....  வெற்றி எனும் வெளிச்சத் தீ உனைத் தேடி வரும்.

இந்த வார காணொளி:

இப்படியும் போக்குவரத்தை ஒழுங்கு செய்யலாம் என்று சொல்கிறார்.  எப்படி?  பாருங்களேன்! :)





படித்ததில்பிடித்தது:

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது.

தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய். புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன்,"ஆஹா...புலியின் மாமிசம் என்ன,என்ன சுவை..! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே"என்றது நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது.

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து,'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்'என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது. இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று,நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.

அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது. குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி,"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்"என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய்,பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து கொண்டு,"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!"என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் சொல்ல வேண்டியதில்லை,நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..

இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது,எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

ஆம்,நண்பர்களே., எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி...

மீண்டும்அடுத்தவெள்ளியன்றுவேறொருஃப்ரூட்சாலட்-ல்சந்திக்கும்வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஃப்ரூட் சாலட் – 130 – பாலம் - காசு படுத்தும் பாடு - ஆண் குழந்தை

$
0
0


இந்தவாரசெய்தி:

பல இடங்களில் கிராம மக்கள் தங்கள் இருப்பிடத்தினை விட்டு வெளியே செல்ல மிகவும் கஷ்டப்படுவது இந்தியாவில் பல இடங்களில் இருக்கிற ஒரு பிரச்சனை. அவர்கள் இடத்திலிருந்து வெளியே செல்லத் தடையாய் வழியில் ஒரு ஆறு அல்லது பள்ளத்தாக்கு இருந்தால் வெளியே செல்ல பாதையே இருப்பதில்லை. பாலங்கள் அமைத்துக் கொடுக்க அரசு முயற்சி செய்யாத போது என்ன செய்ய முடியும். மக்களாகவே முயன்று செய்யக் கூடிய காரியமும் இல்லையே. 

இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு ஆபத்பாந்தவனாக இருக்கும் ஒரு நபர் பற்றி ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் படித்த ஒரு செய்தி இன்றைய செய்தியாக......  

திரு கிரிஷ் [b]பரத்வாஜ் பற்றிய ஆங்கிலச் செய்தி கீழே.



Girish Bharadwaj builds suspension bridges that connect isolated villages with opportunity and link them to future.
Mechanical Engineer, Ist class, 1973 batch, P.E.S. College of Engineering, Mandya, Karnataka.On father’s directive set up a workshop in Sullia to repair farm machinery.Girish Bharadwaj’s story would have ended there, if Forest Officer Narayan had not been transferred from Sullia to Kushalnagar. “Can you connect an island (Nisargadham) in Cauvery to mainland?” he asked GB one day. It was a 50 m span and there were big trees on both sides. With help from a friend who had seen the Lakshman Jhoola, GB arranged to hang a pathway of wooden slats from wire ropes with steel rods as suspenders. “There was no design,” he said. “Only trial and error.”
He was the knight who would lead them out of isolation. “I asked for time, referred to books and decided on a suspension footbridge,” he said. “You know, I got my inspiration studying the Golden Gate!” 
Villagers in India are made of steely stuff. “Make it low-cost,” they said, and went house to house raising money. When he rolled his machinery to the site, 40 volunteers waited with building material. Wooden planks stood stacked. Women served snacks and tea. Two months later, in August 1989, GB’s first, self-designed suspension footbridge, three feet wide, stood inviting. He became the local hero.

திரு கிரிஷ் பரத்வாஜ் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து....

இந்தவாரமுகப்புத்தகஇற்றை:

LIES WILL DESTROY YOU. LIES WILL DESTROY OTHERS. LIES, ONCE FOUND OUT, WILL MAKE EVERYONE QUESTION EVERYTHING YOU SAY. SO, DON’T TELL THEM.



இந்தவாரகுறுஞ்செய்தி:

EVERYDAY IS A NEW BEGINNING. SO JUST SMILE, TAKE A DEEP BREATH AND START AGAIN.



இந்த வார காணொளி:

காசு படுத்தும் பாடு.....  பாருங்களேன் ஒற்றை நோட்டு என்ன பாடு படுத்துகிறது!






ராஜா காது கழுதை காது:

கடை வீதியில் நண்பருடன் நின்று கொண்டிருந்தேன். அவருக்கு அலைபேசியில் அழைப்பு. அழைத்தது அவர் மகன் – ஐந்து வயதாகிறது. “அப்பா நீ வரும் போது ஒரு [b]பேபி [b]பாய் வாங்கிட்டு வா”. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்கல்லாம் முடியாதுப்பா....என்று சமாளிக்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. வரும் போது ஹாஸ்பிடல் போய், காசு கொடுத்து வாங்கிட்டு வா!என்று கட்டளை. சரி முதல்ல வீட்டுக்கு வரேன். அப்புறம் வாங்கலாம்என்று வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்குச் சென்று மனைவியிடம் கேட்க, அவர் சொன்னது இது தான் – “பெண்கள் இருவரும் அவர்கள் தோழிகளுடன் விளையாட, இவர் தனியாக, விளையாட முடியாததால் இப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்திருக்கிறது! அடுத்த நாள் இதைச் சொல்லிவிட்டு, ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் அவர் சொன்னது – “மூணு நாலு வருஷம் முன்னாடி சொல்லிருந்தாலாவது முயற்சி செய்திருக்கலாம்!  



படித்ததில்பிடித்தது:

மாபெரும் இசைமேதை தன குழுவினருடன் இசை வெள்ளம் உருவாக்கிக்கொண்டிருந்தார். அப்போது தட், தட் என்று சப்தம்.

திரும்பிப் பார்த்தால் அந்த அரங்கின் ஒரு பகுதியில் தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.இசைக் குழுவில் இருந்தவர்கள் பொறுமை இழந்தார்கள் .

''இப்படி இடையூறு செய்தால்ஒத்திகை பார்ப்பது எப்படி?''என்று கோபப்பட்டார்கள்.அவர்களின் தடுமாற்றத்தைக் கண்ட இசை மேதை ஒத்திகையை நிறுத்தினார்.

தச்சு வேலை செய்பவர்கள் பக்கம் திரும்பிக் கேட்டார், ''ஐயா, எங்களின்இசை உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?''

ஆணியை அடிக்கக் கையை ஓங்கியவர்கள் அப்படியே நிறுத்திக் கொண்டார்கள்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை; நமக்குத் தொந்தரவாகத் தெரிபவர்களுக்கு நாம் தொந்தரவாகத் தெரிகிறோம்.

-          முகப்புத்தகத்தில் நண்பர் ராஜகோபாலன் பகிர்ந்து கொண்டது.  அவருக்கு நன்றி.



மீண்டும்அடுத்தவெள்ளியன்றுவேறொருஃப்ரூட்சாலட்-ல்சந்திக்கும்வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

மலரே பேசு மௌன மொழி.....

$
0
0



கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அதாவது மார்ச் 14 முதல் 29 வரை பதிவுலகம், முகப்புத்தகம் பக்கமே வராமல் இருக்க நேர்ந்தது. காரணம் ஒரு நீண்ட பயணம். அந்தப் பயணம் எனது நெடு நாள் ஆசையும் கூட. எங்கே பயணம் என்று கேட்குமுன்னர் சொல்லி விடுகிறேன். வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் சென்று வந்தேன்.  சில நண்பர்கள் அங்கே செல்ல ஆர்வத்துடன் இருக்க, அனைவருமாய் அங்கே சென்று வந்தோம்.பதினைந்து நாட்களில் கிடைத்த அனுபவங்கள் எத்தனை எத்தனை......

இப்பயணம் பற்றிய பதிவுகள் எழுத ஆரம்பித்தால் எத்தனை பதிவுகள் வரும் என்று சொல்வது கடினம்! உணவு, உடை, நடவடிக்கை, பழக்க வழக்கங்கள், சுற்றுலாத் தலங்கள், வரலாறு என எத்தனை எத்தனை விஷயங்கள் எத்தனை எத்தனை அனுபவங்கள்! தற்போதைய பயணத் தொடர் முடிந்த பின்னர் இந்தப் பயணம் பற்றியும் எழுதுவேன்.  இப்போதைக்கு, பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் – குறிப்பாய் மலர்களின் படங்கள் உங்களுடன் இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.

ஒரு சில மலர்களின் பெயரோ அவை பற்றிய குறிப்புகளோ என்னிடம் கிடையாது.  ஆனாலும் பெயர் தெரிந்து தான் ரசிக்க வேண்டுமென ஏதும் சட்டமில்லையே! அதனால் இப்பூக்களை ரசிப்பீர்கள் தானே!

வாருங்கள் பூக்கள் பேசும் மௌன மொழியைக் கேட்போம்!

































மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில படங்களுடன் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.  

சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்

$
0
0
தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 6

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 12345



முதல் நாள் இரவு சின்னமஸ்திகா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தோம். இரவு உணவினை முடித்துக் கொண்டு நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பு தீர ஒரு குளியல். பிறகு உறக்கம்.  அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். மற்றவர்கள் அனைவரும் உறக்கத்தில் இருக்க, சரி யாரையும் தொந்தரவு செய்யாது நகர்வலம் வருவோம் என புறப்பட்டேன்.அதிகாலையில் நடை அதுவும் இதமான குளிரில் நடைப்பயணம் மிகவும் அலாதியான சுகம் தருவது.  நடந்து பாருங்களேன் அதன் இனிமையும் புத்துணர்ச்சியும் புரியும். 

முதல் நாள் வாகனத்தில் பயணம் செய்த தொலைவினை நடையில் கடந்தேன். ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தேநீர் அருந்தி, மேலும் நடந்தேன். காலையிலேயே சில பக்தர்கள் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். கவலைகளை மறக்க தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பவர்கள் போலும். நான் காலைக் காட்சிகளை ரசித்தபடியே திரும்பினேன். சில மணித்துளிகள் கடந்த பின்னும் தங்கும் விடுதி உறக்கத்திலேயே இருந்தது!

சரி இன்னும் கொஞ்சம் நடப்போம் என எதிர்புறத்தில் நடையைத் தொடங்கினேன்.சிறிதளவு தொலைவு கடந்தபின் ஒரு பெண்மணி எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்தார். கையிலே ஒரு குச்சி. குளிருக்கான உடைகள் அணிந்திருந்தாலும் அனைத்தும் தோய்த்துப் பலகாலம் ஆனது தெரிந்தது. எனக்கருகே வந்ததும் குச்சியை வேகமாக ஆட்டியபடி “என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? நான் பைத்தியம் இல்லை – என்னைத் தவிர மற்ற அனைவரும் பைத்தியம் தான்என்று சொல்லி திட்டிக் கொண்டே கடந்தார்.

நடந்து கொண்டிருந்தாலும் அவர் அருகே வந்து சொன்னதைக் கேட்டபோது ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த இடத்திலேயே நின்று விட்டேன். நடக்க முடியவில்லை. சூழ்நிலை அவர்களை இப்படித் தள்ளியிருக்க, அவர் என்ன செய்வார் பாவம். சுதாரித்துக் கொண்டு மேலும் நடந்தேன்.

முந்தைய தினம் வாகனத்தில் வரும்போது ஒரு இடத்தில் வானம் வண்ணமயமாய்க் காட்சி அளித்தது ஒரு இடத்தில் – அதே இடத்தில் நின்று காலை நேர வானத்தினை நோக்கியபடி நின்று சில புகைப்படங்களை எடுத்தேன்.  மீண்டும் தங்குமிடம் நோக்கி திரும்பினேன். வழியில் மீண்டும் அந்தப் பெண்மணி. வேறு யாரையோ திட்டியபடியே நடந்து கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ....  சிந்தபூர்ணியில் குடிகொண்டிருக்கும் சின்னமஸ்திகா தேவி அப்பெண்மணியின் கவலைகளை எப்போது தீர்ப்பாரோ?

காலையில் மேலும் சில கடைகள் திறந்து அன்றைய வியாபாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தங்குமிடம் திரும்ப, ஒவ்வொருவரும் அன்றைய தினத்திற்கான அனுபவங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் சென்று தயாரானேன். காலை உணவினை முடித்துக் கொண்டு கோவில் செல்ல உத்தேசம்.  அதற்கு முன்னர், சென்ற பதிவில் சொன்ன வரலாறு பற்றி பார்த்து விடுவோமா?

மார்க்கண்டேய புராணத்தில் வரும் ஒரு கதை இது. சண்டி தேவி உக்கிரமான போரில் பல அசுரர்களை அழித்தார். அனைத்து அசுரர்களையும் அழித்த பிறகு அவரது யோகினி வடிவங்களான ஜெய, விஜயா [டாகிணி, வாரிணி என்றும் அழைப்பதுண்டு] ஆகியோருடன் மந்தாகனி நதியில் நீராடச் சென்றார்.  சண்டி தேவியின் மனதில் அமைதி குடிகொண்டது - ஆனால் அதற்குப் பின்னரும் அவரது யோகினி வடிவங்களுக்கு தாகம் அடங்கவில்லை. தங்கள் தாகத்தினைத் தணிக்க வேண்ட, கொஞ்சம் பொறுமை காக்கச் சொன்னாராம்.



ஆனாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்க, தனது தலையைத் துண்டித்து, ஒரு பக்கத்தில் இரத்தம் குடிக்க, ஜெய, விஜய ஆகிய இருவரும் வேறு ஒரு பக்கத்தில் இரத்தம் குடித்து தங்களது தாகத்தினை போக்கிக் கொண்டதாக கதை. 

சின்னமஸ்திகா தேவியை மனதாரத் துதிக்கும் பக்தர்கள் தங்கள் கட்டுகளிலிருந்து விடுபட்டு பூரண முக்தியடைவார்கள் என்று காட்டவே இப்படி ஒரு கதை இருக்கலாம். எது எப்படியோ, ஒவ்வொரு கோவிலுக்கும் சில வரலாறுகள் – நம்பக் கூடியவையா இல்லையா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன்!

நீங்கள் படித்து முடிப்பதற்குள் நானும் தயாராகி விட்டேன். இந்தப் பயணத்திற்கான முக்கிய காரணமே சிந்தபூர்ணியில் நடக்க இருந்த ஒரு பூஜை தான் – தில்லியில் இருக்கும் ஒரு சபை சிந்த்பூர்ணியில் 108 பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எங்கள் பகுதியிலிருந்து சிலரும் செல்ல, அதைச் சாக்கிட்டு நாங்கள் அனைவரும் பயணித்தோம். அதற்காக அனைவரும் புறப்பட்டு கோவிலை நோக்கி நடந்தோம். 

அன்று பகல் பொழுது முழுவதுமே கோவிலில் தான் எங்களுக்கு வாசம். அங்கே கிடைத்த அனுபவங்கள், வேறு சில விஷயங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
    
தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


சாப்பிட வாங்க: சூர்மா லட்டு.....

$
0
0


இன்னாம்மா கண்ணு, மூணு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட வாங்கன்னு சொல்லி பேட்மி பூரிகொடுத்தது! அப்பால ஆளையே காணோமே!ன்னு தேடிட்டு இருக்கறதா டி.வி.ல நியூஸ் வரதுக்கு முன்னால, நாமே வந்துடுவோம்னு இதோ வந்துட்டேன்!

ஃபிப்ரவரி மாசம் Garden of Five Senses-ல் 28-வது Garden Tourism Festivalநடந்தது பற்றியும் அங்கே சென்று வந்தது பற்றியும் பூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம்என்றும் பூமகள் ஊர்வலம்என்றும் இரண்டு பதிவுகள் எழுதி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அன்று சென்றபோது அங்கே ராஜஸ்தானிய உணவு வகைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கே சாப்பிட்ட ஒரு உணவு தான் இன்று நாம் பார்க்கப் போகும் [ch]சூர்மா லட்டு!இரண்டு லட்டு வாங்கினோம் – சுளையா ஐம்பது ரூபாய் வாங்கி கல்லால போட்டுக் கொண்டார்!  



நாங்கள் மூன்று பேர் என்றாலும் இரண்டு லட்டு மட்டுமே வாங்கினோம். கொஞ்சம் பெரிய அளவில் இருந்தது என்பதாலும், எப்படி இருக்கும் என்பது தெரியாததாலும் இரண்டு! வாங்கிச் சாப்பிட்ட பிறகு இன்னும் கூட வாங்கியிருக்கலாம் எனத் தோன்றியது! ஆனாலும் அக்கடையின் பணியாளரையும், சூர்மா லட்டு அடுக்கி வைத்ததையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது முறைத்துப் பார்த்த அந்த தலைப்பாக்காரர் நினைவில் வந்து கொஞ்சம் பயமுறுத்தவே வாங்கவில்லை!  அந்த சூர்மா லட்டு எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [400 கிராம்], ரவை [100 கிராம்], நெய் [500 கிராம்], [B]புரா [எ] [t]ட[g]கார் [700 கிராம்], மாவா [எ] கோயா [250 கிராம், முந்திரி [100 கிராம்], பாதாம் [50 கிராம்], Dried Resin [50 கிராம்] மற்றும் ஏலக்காய் [20 – பொடி செய்து கொள்ளுங்கள்].  

அது சரி இதுல என்னமோ [B]புரா [எ] [t]ட[g]கார்அப்படின்னு சொல்லி இருக்கே அது என்ன என்று கேட்பவர்களுக்கு, கம்பி பதத்தில் சர்க்கரைப் பாகு செய்து, அடுப்பு நிறுத்தியபிறகு அதை கலக்கியபடியே இருந்தால் சர்க்கரைப் பொடியாக கிடைக்கும். அது தான் இந்த [B]புரா [எ] [t]ட[g]கார்.  வடக்கில் இது கடைகளில் கிடைக்கும். வேறு இடங்களில் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எப்படிச் செய்வது எனும் காணொளி இங்கேஇருக்கிறது

எப்படிச் செய்யணும் மாமு?

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவும் ரவையும் போட்டு கலந்து கொள்ளுங்கள். அதில் நான்கில் ஒரு பங்கு நெய் சேர்த்து கலக்குங்கள்.  பின்னர் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளுங்கள். இங்கே தண்ணீருக்குப் பதில் 100 மி.லி. பால் சேர்த்துப் பிசைந்து கொண்டால் நல்லது! கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் தனியாக விட்டு விடுங்கள்! அந்த நேரத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய சீரியல்களிலோ அல்லது வலைப்பூக்களையோ படிப்பதிலோ கவனம் செலுத்தலாம்! தவறில்லை!

இந்த ஒரு மணி நேரத்தில் எத்தனை பதிவுகள் படித்தீர்கள் என எனக்குச் சொல்லி விட்டு அடுத்த வேலைக்கு தயாராகுங்கள். ஒரு வாணலியில் 250 கிராம் நெய் விட்டு சூடாக்குங்கள். பிசைந்து வைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதை தட்டையாக்கி [வடை போல] சூடான நெய்யில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுங்கள். இப்படி எடுத்தவற்றை ஒரு தட்டில் வைத்து அது சூடு போகும் வரை காத்திருங்கள். காத்திருக்கும் நேரத்தில் மேலும் ஒரு பதிவு படியுங்கள் என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை! இப்படிப் பொரித்த எடுத்ததற்கு ராஜஸ்தானில் “[b]பாட்டிஎன்று பெயர். பாட்டி இல்லைங்க! [b]பாட்டி!

சூடு குறைந்த பிறகு [b]பாட்டிகளை சிறு துண்டுகளாக்கி, மிக்சர்-க்ரைண்டரில் நன்கு பொடியாக்குங்கள். கட்டிகள் இருக்ககூடாது. இப்போது மீதமிருக்கும் ஒரு பங்கு நெய்யில் இந்தப் பொடியை போட்டு சற்றே வறுத்து எடுங்கள்.  மாவா/கோவாவையும் வறுத்து பொடியுடன் சேருங்கள்.  அதனோடு [b]புரா, முந்திரி, பாதாம், Dried Resinமற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்குங்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டுவாக பிடித்து தட்டில் வையுங்கள். சுடச்சுட சூர்மா லட்டு தயார்.

இத்தனை மெனக்கெட்டு தயார் செய்து சாப்பிடப் பொறுமை இருப்பவர்களுக்கு ஒரு பூங்கொத்து!

அடப் போய்யா! இவ்வளவு வேலை செய்யணுமா இதுக்கு..... இந்த நேரத்துல நான் நிறைய பதிவுகள் படிச்சு இருப்பேன், வீட்டு வேலைகள் செய்திருப்பேன், என்று சொல்லும் ஆளா நீங்க! என்னைப் போலவே இருக்கீங்களே! :) நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. பெரும்பாலான வட இந்திய கடைகளில் இந்த சூர்மா லட்டு கிடைக்கிறது. விலை தான் கொஞ்சம் அதிகம்! ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்களேன் இந்த சத்தான் சூர்மா லட்டுவை!

மீண்டும் வேறு ஒரு அனுபவம்/உணவு வகையோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

எதிர்பார்ப்பு இல்லா அன்பு

$
0
0




புதன் கிழமைகளில் குறும்படங்கள் பகிர்ந்து கொண்டு நீண்ட நாட்களாகி விட்டன. இன்று அக்குறையை நீக்கப் போகிறேன்.  இன்று பகிர்ந்து கொள்ளும் குறும்படம் தாய்லாந்து நாட்டில் நடந்த உண்மை நிகழ்வு ஒன்றினை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்.  எனக்குத் தாய் மொழி – அட Mother Tongue இல்லை தாய்லாந்து மொழி தெரியாதே என கவலைப் படத் தேவையில்லை!  ஆங்கிலத்தில் Sub-Title இருக்கிறது. சில படங்களுக்கு மொழி என்பதே தேவையில்லை என்பதும் ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயம்.


கல்லூரி/பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி. தினமும் வகுப்புகள் முடிந்ததும் தனது இருப்பிடம் நோக்கி வேகவேகமாகத் திரும்புகிறார். குழந்தையை தனியே விட்டு வந்ததால் வரும் வேகம்.  திருமணம் ஆகாமலேயே குழந்தை இருப்பதால் அவரது நடத்தை பற்றி முதுக்குக்குப் பின்னால் அவதூறு பேசும் சமூகம்.  ஆனாலும் அது பற்றிய கவலை அவருக்கு இல்லை.  அதற்குக் காரணம் என்ன என்று சொல்லும் குறும்படம்.

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு காண்பிக்கும் குணம் இப்போது யாரிடமும் இல்லை என்றே சொல்லி விடலாம். எதிலும் ஒரு எதிர்பார்ப்பு – நமக்கு என்ன கிடைக்கும், இதைச் செய்வதால் என்ன பலன் என்ற யோசனை இல்லாது எதையும் செய்வதில்லை. இப்பெண் அப்படி இல்லாமல் செய்தது என்ன என்பதை பாருங்களேன். இது நிஜத்தில் சாத்தியமா என்ற நினைப்பு வந்தாலும், நடந்ததைத் தானே குறும்படமாக எடுத்து இருக்கிறார்கள் என்ற உண்மையும் மனதில் உறைக்கிறது.

படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன். படம் தயாரித்தவர்களும், அதில் நடித்த கதாபாத்திரங்களுக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக அப் பெண் குழந்தை......  அழகு!



என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

காலை உணவும் கோவில் அனுபவங்களும்

$
0
0


தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 7

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 123456


 ஒருவருக்குப் பின்னால் இன்னொருவர் - வழியில் பார்த்த அனுமன் கோவில்!

கோவிலை நோக்கி நடக்கும் பாதையில் ஒரு கோவில். அங்கே சின்னத் திருவடியாம் அனுமனின் இரண்டு திருவுருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருக்க, அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு மேலே நகர்ந்தோம். இது போல ஒருவருக்குப் பின்னால் ஒருவராக அனுமனை வேறு எங்கும் பார்த்த நினைவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.

 உணவகத்தில் வைத்திருந்த தேவியின் சிலை

காலை நேரத்திலேயே பிரசாதக் கடைகள் திறந்திருந்தார்கள். கூடவே பலவிதமான உடைகள், பொருட்கள் என கடைகளில் விற்பனைக் காத்திருந்தன. அவற்றையெல்லாம் நோட்டம் விட்டபடியே நடந்தோம். வழியில் Vishwamitra Hotel and Restaurant எனும் பதாகை பார்த்தவுடன் காலை உணவு சாப்பிடாத நினைவு வந்தது. கோவிலில் எத்தனை நேரமாகும் என்பது தெரியாததால் காலை உணவினை முடித்துவிடலாம் என உள்ளே நுழைந்தோம். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. மதிய உணவு சாப்பிட ரொம்பவே நேரமானது.


பூரி - சன்னா மசாலா - கூடவே தயிரும் வெங்காயமும்!

பதினான்கு பேர் என்பதால் இரண்டு மூன்று டேபிள்களைச் சேர்த்து போட்ட பிறகும் சிலருக்கு இடம் போதவில்லை. நானும் இன்னும் சிலரும் தனியாக வேறு இடத்தில் அமர்ந்தோம். சிலர் பூரி மசாலா, சிலர் ஆலு பராட்டா, ஒரு சிலர் பனீர் பராட்டா, சோலே பட்டூரா என்று சொல்ல, அனைத்தையும் தயார் செய்ய சிறிது நேரம் பிடித்தது. அதுவரை அனைவரும் அரட்டை அடித்தபடி இருக்க, நான் கேமராவிற்குத் தீனி போட்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது!


 பானி பூரி - கண்ணாடிக் கூண்டிற்குள்!

ஒருவழியாக கேட்டவை கிடைக்க, அனைவரும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தனர். சாப்பிட்டு முடித்து அதற்கான கட்டணத்தினைக் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தோம். செலவும் அப்படி ஒன்றும் அதிகமாக ஆகவில்லை. 14 பேருக்கு ஆயிரத்திற்கும் குறைவு தான். வெளியே வந்து கோவிலை நோக்கிய நடைப் பயணத்தினைத் தொடர்ந்தோம். உணவகத்தினை விட்டு வெளியே நடக்கும்போது பார்த்தால் காலையிலேயே பானி பூரி விற்பனை தொடங்கி இருந்தது. வட இந்தியர்களுக்கு இந்த பானி பூரி சாப்பிடாவிட்டால் ஜன்மம் சாபல்யம் அடையாதோ என்னமோ!

 இந்தப் பழம் ரஸ்பெரி என்று சொன்னார் - அது சிவப்பாகத் தானே இருக்கும்! - 
ஆனால் சாப்பிட விருப்பமில்லை!

விதம் விதமாய் மலைப் பிரதேசத்துப் பழங்கள், கடைகளில் இருந்த பொருட்கள் எனப் பார்த்துக் கொண்டே கோவிலை அடைந்தோம். முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே ஒரு கடையில் பிரசாதம் வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிகள் வழியே கோவில் பாதைக்குச் சென்றோம். சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடைந்தோம். நேற்றைய இரவினை விட இன்று மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமிருந்தது. ஆனாலும் தள்ளுமுள்ளு இல்லாமல், “ஜருகண்டி, ஜருகண்டிஎன்று தள்ளாததால் நிம்மதியாய் தேவியை தரிசித்தோம்.

 இலந்தப் பயம்.... இலந்தப் பயம்....
போடு செக்கச் சிவந்த பயம்......  அது தேனாட்டாம் இனிக்கும் பயம்! பாட்டு பின்னணியில் ஒலிக்கிறதோ?

நாங்கள் கோவிலுக்கு வந்துவிட்டாலும் நிகழ்ச்சி [லலிதா சஹஸ்ரநாம பாராயணம்] ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் வந்து சேரவில்லை. Indian Punctuality! அதனால் கோவிலிலேயே காத்திருந்தோம்.  கேமராவிற்குத் தீனி போட நிறைய குழந்தைகள் அங்கே இருக்க, ஒவ்வொருவராய் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். தவிர வேறு சில காட்சிகளும் காணக் கிடைத்தன.

 கோவிலில் இருந்த சிறுவர்கள்.....

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அங்கே இருக்கும் பல பெண்கள் அவரது காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது குங்குமப் பொட்டு பெண்மணி அப்பெண்களின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார். கீழே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென தனது கைகளையும் பின்னால் கொண்டு சென்று முடித்திருந்த கூந்தலை அவிழ்த்து அன்னியன் போல ஆனார். தனது கைகள் இரண்டையும் தரையில் தட்டி ஒரு சாமியாட்டம். சில நொடிகளில் மீண்டும் கூந்தலை அள்ளி முடிந்து ஒரு மந்தகாசப் புன்னகை. இது அடிக்கடி நடந்தது. சாமியாடிகள் எல்லா இடங்களிலும் உண்டு போலும்!

 கண்கள் இரண்டும் சொல்லும் கதைகள் பல! அந்த திருஷ்டிப் பொட்டை கவனியுங்கள்!

அங்கே நடந்த வேறொரு திருவிளையாடலும் படக்காட்சிகளாக வைத்திருந்தார்கள். அப்பகுதியின் ராஜா-ராணி. அவர்களுக்கு ஒரே ஒரு புதல்வன்.  ஒரு நாள் மந்திரி சபைக்கு இரு சாதுக்கள் வருகிறார்கள். அவர்களுடன் ஒரு புலியும் வருகிறது. புலிக்கு பயங்கர பசி – நர மாமிசம் வேண்டும் என்று சாதுக்கள் சொல்ல, தன்னையே தர விழைகிறார் ராஜா.  இல்லை வேண்டாம் என சாதுக்கள் மறுக்க, ராணி தன்னைத் தர முன் வருகிறார்.

 தன் மகனின் தலையில் ரம்பம் வைத்து தயாராய் ராஜாவும் ராணியும்.....

இரண்டு பேரையும் மறுத்துவிட, தனது ஒரே ஒரு மகனை புலிக்கு இரையாகத் தர சம்மதிக்கிறார்கள் ராஜாவும் ராணியும். சாதுக்களும் இதற்கு சம்மதிக்க, ராஜாவும் ராணியும் தன் மகனின் தலை மீது ஒரு பெரிய ரம்பம் வைத்து மகனை புலிக்குத் தர ஆயத்தமாகிறார்கள்.  மாதா சிந்த்பூர்ணி அங்கே அவர்கள் மூவரின் மீதும் பூக்களைப் பொழிந்து உம் பக்தியோடு விளையாடவே யாம் வந்தோம்என்று திருவிளையாடல் சிவாஜி மாதிரி குரல் கொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்.

 இந்தப் புன்னகைக்கு என்ன விலை.....?

இப்படியாக கோவிலில் இருக்கும் பக்தர்களையும், நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள். அடுத்தது அவர்கள் பக்தியில் திளைத்திருக்க, நான் புகைப்படங்கள் எடுப்பதிலும், ஓய்வு எடுப்பதிலும் மும்மரமானேன்.  பிற்கு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா!
    
தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஃப்ரூட் சாலட் – 131 – வீடில்லா கொடுமை - பட்டாம்பூச்சி – நல்லாசிரியர்

$
0
0

இந்தவாரசெய்தி:

இந்தியாவில் பெருநகரங்களை நோக்கி தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வேலை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு இருக்க இடமோ, தெரிந்தவர்களோ இருப்பதில்லை. ஆனாலும் ஒரு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் நகரங்களை நோக்கி வருகிறார்கள். தலைநகர் தில்லியில் மட்டும் இப்படி வரும் நபர்கள் எண்ணிலடங்கா.  அப்படி ஒன்றும் பெரிதாய் படித்தவர்களோ, வேலை தெரிந்தவர்களோ இல்லை – பாமர மக்களும் இப்படி வருகிறார்கள். 

வந்தாரை வாழ வைக்கும் நகரம் என்று சொல்வதிற்கில்லை என்றாலும் இப்படி வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தலை நகர் தில்லிக்கு இப்படி வருபவர்கள், கிடைத்த வேலை செய்து கொண்டு, இரவு நேரங்களில் மேம்பாலங்களுக்கு அடியிலோ, பேருந்து நிறுத்தங்களிலோ, ஆங்காங்கே இருக்கும் பூங்காக்களிலோ அல்லது சாலையோர நடைபாதைகளிலோ படுத்துக் கொள்கிறார்கள்.  

நாள் முழுவதும் ரிக்‌ஷா இழுப்பது, மூட்டை தூக்குவது போன்ற கடுமையான வேலைகள் செய்யும் அவர்களுக்கு இரவுத் தூக்கம் பஞ்சு மெத்தையில் அல்ல! அதுவும் குளிர் காலங்கள் என்றால் ரொம்பவே கொடுமை. அதீதமான குளிரில் வீட்டுக்குள் இருந்தாலே குளிருமே, இதிலே வெட்ட வெளியில் போதிய கம்பளி உடைகள் இல்லாது படுப்பது இவர்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். 

அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் குளிர் காலங்களில் தற்காலிக Night Sheltersஏற்படுத்திக் கொடுத்தாலும் போதிய அளவு இருப்பதில்லை என்பது தான் உண்மை நிலை. இவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் Corporate Social Responsibility என ஒரு பொறுப்பு இருக்கிறது. தனது நிறுவனத்திற்குக் கிடைக்கும் லாபத்திலிருந்து ஒரு கணிசமான பங்கினை இப்படி தேவையானவர்களுக்கு உதவி செய்ய கொடுக்க வேண்டும்.

நேற்று ஒரு காணொளி காண நேர்ந்தது. பாகிஸ்தானில் உள்ள நிறுவனம் Molty Foam – படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனம் இது. பாகிஸ்தானில் உள்ள பெரு நகரங்களிலும் இப்படி வீடு இல்லாது உழைக்கும் மக்களுக்கு அவர்கள் ஒரு நல்ல வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.  பகல் நேரங்களில் அவர்களது நிறுவனத்தின் விளம்பரப் பலகையாக இருப்பதை, இரவு நேரங்களில் கொஞ்சம் திருப்பி படுக்கையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையாக 9 நகரங்களில் அமைத்திருக்கிறார்கள்.

சென்ற அக்டோபர் மாதத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளம்பரப் பலகை படுக்கைகளின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 60000 வரை உயர்ந்திருக்கிறது.  இந்தக் காணொளியைப் பாருங்களேன்!




இது போன்ற நல்ல விஷயத்தை இந்திய நிறுவனங்களும் ஏன் முயற்சி செய்யக் கூடாது?



இந்தவாரமுகப்புத்தகஇற்றை:




A child is like a butterfly in the wind – some can fly higher than others, but each one flies the best it can. Why compare one against the other? Each one is different. Each one is special. Each one is beautiful!



இந்தவாரகுறுஞ்செய்தி:

'என்ன வாழ்க்கைடா இது'என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை'என்று எண்ணி வாழுங்கள், வெற்றி நிச்சயம்.



இந்த வார காணொளி:

இவர் மாதிரி நல்லாசிரியர் தான் இப்போதைய தேவை. மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் இவருக்கு என்ன ஒரு ஈடுபாடு! பாருங்களேன்!



படித்ததில்பிடித்தது:

அவன் பள்ளிக்குப் போக வீட்டை விட்டு வெளியே வந்தான். வானத்தில் பறந்து கொண்டிருந்த வானம்பாடிகளைப் பார்த்து, "என்ன கவலையில்லாத வாழ்க்கை?"என்று சொன்னான். இதைக் கேட்ட பெரியவர் ஒருவர் அவனை நெருங்கி, "அவை பூச்சிகளையும், ஈக்களையும் பிடித்து தங்கள் குஞ்சுகளுக்கு கொண்டு போய்க் கொடுக்கின்றன. மகிழ்ச்சியாகப் பறந்தவண்ணம் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. நீ நினைப்பது போல அவை வீணே திரியவில்லை"என்றார். புரிந்துகொண்ட சிறுவன் பள்ளிக்கு ஓடினான்.

-   ஃப்ரான்ஸ் கம்பன் மகளிரணிவலைப்பூவிலிருந்து....



மீண்டும்அடுத்தவெள்ளியன்றுவேறொருஃப்ரூட்சாலட்-ல்சந்திக்கும்வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

இசையும் நடனமும்

$
0
0


தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 8

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1234567


புகைப்படம் எடுக்கச் சொன்ன பெண்மணி

ஒரு வழியாக நிகழ்ச்சியை நடத்தும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட, நாங்களும் எங்களால் ஆன உதவிகளைச் செய்தோம். எல்லோரும் சேர்ந்து பணி புரிவது நல்லது தானே. அப்போது தானே நிகழ்ச்சியும் எவ்வித தடையும் இன்றி காலாகாலத்தில் முடிவடையும். ஒரு பெரியவரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். மனைவி, தனது கணவரிடம் அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்ல அவர் தடுமாறினார். பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து, அந்த பெண்மணி, “மகனே, அவருக்கு ஒண்ணும் தெரிவதில்லை! நீ கொஞ்சம் கற்றுக்கொடு....எனச் சொல்ல, அவருக்கு அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்லிக் கொடுத்தேன். அப்படியே எனது கேமராவிலும் ஒரு படம் எடுத்தேன்.

 இசைக் கலைஞர்கள்

முழுவதும் பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எங்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. ஆரம்பித்த பிறகு அங்கே சுற்றிக் கொண்டிருப்பது சரியல்ல என்பதால், வெளியே, குளிருக்கு இதமாய் வெயிலில் அமர்ந்து கொண்டோம். சில சிறுவர்களும் அங்கே அமர்ந்து கொள்ள, பொழுது போனது.  அது தவிர பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் ஷெஹனாய் இசையும் கூடவே தபலா போன்ற மேளமும் வாசிப்பார்கள்.

இசையும் நடனமும்

அவர்களுக்கு காசு கொடுக்க, நம் பெயரை உரக்கச் சொல்லி தேவியிடம் இன்னாருக்கு நல்லதையே கொடு என வேண்டிக் கொள்வார்கள்.  இசை, தாளம் என்றாலே வட இந்தியர்களுக்கு கொண்டாட்டம் தான். உடனே ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். இங்கேயும் இப்படித்தான். ஒரு வட இந்தியர் இசையைக் கேட்டவுடன், ஆட ஆரம்பித்து விட்டார். ஆடி முடித்து இசைக் கலைஞர்களுக்கு கொஞ்சம் காசும் கொடுத்து விட்டுத் தான் நகர்ந்தார்.


எத்தனை எத்தனை வேண்டுதல்கள்.....


நேர்ந்து விடப்பட்ட ஆடு....
கோவில் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் பலவிதக் கயிறுகள் கட்டி இருந்தன.  தங்களுக்குத் தேவையானவற்றை மனதில் வேண்டிக் கொண்டு இப்படி கயிறு கட்டி வைக்கிறார்கள்.  இது தவிர கோவிலுக்கு ஆடுகளையும் நேர்ந்து விடுகிறார்கள்.  அதை கோவிலில் பலியிடுவதில்லை என்றாலும் அது எங்கே எப்படி சென்று சேரும் என்பது தேவிக்கே வெளிச்சம்.


தேங்காய் மூடி போலவே இருக்கும் பிரசாதத் தட்டுகள்..... கீழே இருப்பது மாங்கோ ஜெல்லி....
தொடர்ந்து பூஜை நடந்து கொண்டிருக்க, நானும் இன்னும் சிலரும் தங்குமிடத்திற்கு வந்து அறைகளை காலி செய்து கொண்டு அடுத்த பயணத்தினைத் துவங்க ஏற்பாடுகள் செய்யலாம் என முடிவு செய்தோம். வரும் வழியில் மீண்டும் சாலைக் காட்சிகள். இப்போது மக்கள் வருகை இன்னமும் அதிகரித்து இருந்தது என்றாலும் நவராத்திரி சமயம் போல அத்தனை கூட்டம் இல்லை. கடைகளில் விற்பனையும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கடைகளில் வித்தியாசமான வகையில் இருந்த பொருட்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.


தாடியும் மீசையும் விற்பனைக்கு!
வழியில் ஒரு சிறுவன் – ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம் – தாடி மீசை போன்றவற்றை ஒட்டிக்கொண்டு ஒட்டு தாடி, மீசைவிற்பனை செய்து கொண்டிருந்தான். இரண்டும் சேர்த்து 20 ரூபாயோ 25 ரூபாயோ. அவனை தாடி மீசையோடு புகைப்படம் எடுக்க முயல, தனது முகத்தினை மறைத்துக் கொண்டான் – “முதல்ல ஒரு தாடி-மீசை வாங்குய்யா! அதை விட்டு புகைப்படம் எடுப்பதில் எனக்கென்ன லாபம்?என்று சொல்வது போல இருந்தது! வேறு ஒரு சிறுவனும் இப்படி விற்றுக் கொண்டிருக்க, அச்சிறுவனின் புகைப்படம் எடுத்தேன்.


தள்ளாத வயதிலும் உழைக்கும் பெரியவர்.....

ஒரு பெரியவர் பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விற்றுக் கொண்டிருந்தார். இந்த மூத்த வயதிலும் உழைக்கும் அவருக்கு ஒரு சல்யூட். கொஞ்சம் வேர்க்கடலை வாங்கிக் கொண்டோம்.  எங்களுடன் வந்திருந்த பெண்களில் ஒருவர் பானி பூரி கேட்க, அதை அவருக்கு வாங்கிக் கொடுத்தோம். பக்கத்திலேயே ஒரு பழம் – பெயர் அமர்ஃபல் என்று சொன்னார். நன்றாகத் தான் இருந்தது. கூடவே கொஞ்சம் காலா நமக் போட்டு இலந்தைப் பழம். இப்படியே கொரித்துக் கொண்டே கடைவீதியில் வேடிக்கைப் பார்த்டபடியே தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.

அமர்ஃபல்....

காலையிலேயே உடமைகளை அவரவர் பைகளில் வைத்து விட்டபடியால், தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கட்டி அங்கிருந்து காலி செய்தோம். பக்கத்திலேயே தான் தில்லியிலிருந்து நாங்கள் எடுத்துச் சென்ற வாகனம் நின்றிருக்க அதிலே எல்லாவற்றையும் வைத்தோம். பக்கத்திலே இருக்கும் உணவகத்தில் அமர்ந்து கொண்டு மதிய உணவு என்ன இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தோம். பூஜை முடிந்து அவர்கள் வரட்டும். அதற்குள் நாம் சாப்பிடலாம் என பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அலைபேசியில் அழைப்பு!


குல்லாய்கள் மட்டுமே விற்பனைக்கு!

“சாப்பிட வேண்டாம். நாங்களும் வந்த பிறகு சாப்பிடப் போகலாம்!என்று மிரட்டல்! சரி என்ன என்று வந்த பின் கேட்டுக் கொள்ளலாம் என அங்கிருந்து வெளியே வந்தோம். அந்த உணவகத்தின் பணியாளர்கள் நிச்சயம் எங்களை திட்டியிருக்கக் கூடும்! எத்தனை எத்தனை கேள்விகள் கேட்டு அவர்களை படுத்தி இருப்போம்!

எங்களைப் போலவே இச்சிறுமிக்கும் பசி போல! ஏன் கண்மணி சோகம்....

அப்படி படுத்தியதற்கு எங்களுக்கு அன்றே பலன் கிடைத்தது! அது என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாமே!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

மன்மதன் வந்தானா?

$
0
0


அன்பு நண்பர்களுக்கு,




தமிழ் வருடங்கள் அறுபதில், 29-வது வருடமாக வருவது தான் மன்மத ஆண்டு. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் இருக்கும் பலனை வருடாதி வெண்பாஎன்ற தலைப்பில் பாடல்களாக அக்காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்களாம். அப்படி இன்று பிறக்கும் மன்மத ஆண்டிற்கான வெண்பா பாடல்......


இடைக்காட்டு சித்தர் எழுதிய 'மன்மத வருட வெண்பா'

மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் காண்.

பொருள்: இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும்  நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.

பலவகையான தானியங்கள், பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள், மூலிகைகள்  சேதமடைந்து குறையலாம்.

பாடலின் பொருளை பார்க்கின்ற பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. மழைக்காக ஏங்கி மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் மழை வளம் பெருகும் என்று முதல் சொல்லாகவே குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் சூறாவளிக் காற்று, இயற்கை சீற்றங்களின் விளைவாக காட்டில் விளையும் அற்புதப் பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு உண்டு என்று குறிப்பிடப்படுகின்றது.
                                                       நன்றி: தினத்தந்தி



பாடல் சொல்வதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். 

இந்த “மனமதஆண்டில் உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோய் நெருங்கிடா வாழ்வும், அள்ள அள்ளக் குறையா செல்வமும், நீண்ட ஆயுளும், பெற்றிட எங்களது வாழ்த்துகள்!


நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்



சாப்பிட வாங்க: லிக்கர் சாய்

$
0
0




சாய் கேள்விப்பட்டிருக்கோம். அதே மாதிரி லிக்கர் அதாங்க சாராயமும் கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டும் சேர்த்து லிக்கர் சாய் கேள்விப்பட்டதுண்டா? என்னது லிக்கர் சாய்? என்று நீங்கள் கேட்கலாம். அது என்ன, பால் அல்லது தண்ணீருக்குப் பதிலா, சாராயம் ஊற்றி சாய் போட்டு தருவாங்களா? இல்லைன்னா சாராயத்தில் சர்க்கரை போட்டுத் தருவாங்களா? தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும் போல இருக்கேஅப்படின்னு ரொம்ப குழப்பிக்காதீங்க....  எப்படியும் பதில் சொல்லத் தான் போறேன் – அதுவும் இந்தப் பதிவிலேயே சொல்லிடறேன்!

சமீபத்திய வட கிழக்கு மாநில சுற்றுப்பயணத்தில் பல இடங்களில் பகல் நேரங்களில் நீண்ட பயணத்தின் போது கொஞ்சம் சாய் கிடைச்சா நல்லா இருக்குமே என்று வண்டியை நிறுத்துவோம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித அனுபவம். பொதுவா, நம்ம தமிழ்நாட்டுல பால் சேர்த்து தான் சாயா சாப்பிடுவது வழக்கம். கேரளத்தில் பாலில்லாமல் கட்டஞ்சாய்! என்னுடன் வந்தவர்கள் நான்கு பேருமே கேரளத்தினைச் சேர்ந்தவர்கள். அதில் இரண்டு பேர் பாலுடன் தேநீர் சாப்பிடவே சாப்பிடாதவர்கள்.

அதனால் எங்கே சென்றாலும் முதலிலேயே இரண்டு Black Tea, மூன்று Milk Tea என்று சொல்வது வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலத்தில் சொல்ல முடியாது என்பதால் ஹிந்தியில் தான் சொல்வோம். இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொரு விஷயம் ஹிந்தி மொழி பற்றியது. பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்தி பேசவும்,புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். சின்னச் சின்ன கடைகளில், அதுவும் கிராமப் புறங்களில் இருக்கும் கடைகளில் கூட ஹிந்தி மொழியில் பேசினால் புரிந்து ஹிந்தியில் பதிலும் சொல்கிறார்கள்.

இந்த இடங்களில் Black Tea-ஐ “லால் சாய்என்று சொல்கிறார்கள். ஹிந்தியில் லால் என்றால் சிவப்பு வண்ணம்.  என்னதான் ஆங்கிலத்தில் Black Tea என்று சொன்னாலும் ஹிந்தியில் சிவப்பு சாய்! பல இடங்களில் இப்படி சிவப்பு சாய் தான் கிடைக்கிறது. பால் விட்ட சாய்க்கு பெயர் “DOODH CHAI”.  அதாவது பால் டீ.  இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். பெரும்பாலான மலைப் பிரதேசங்களில் பால் கிடைப்பது அரிது. அதனால் பால் சாய் என்று சொன்னவுடன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

லால் சாய் அதாவது Black Tea தயாரித்த பின், அதை ஒரு கப்பில் விடுகிறார்கள். பக்கத்திலேயே ஒரு மில்க் மெய்ட் டின் இருக்க, அதிலிருந்து ஒரு ஸ்பூன் மில்க் மெய்ட் எடுத்து லால் சாயில் ஒரு கலக்கு! அதான் பால் டீ! ஏற்கனவே சர்க்கரை போட்டிருக்க, இந்த இனிப்பான மில்க் மெய்ட் கலந்த பிறகு ஒருவித அசட்டு தித்திப்புடன் நீங்கள் கேட்ட தூத் சாய் உங்கள் கைக்கு வருகிறது! வாயில் வைத்த பிறகு தான் ஏண்டா இந்த தூத் சாய் கேட்டோம், பேசாம லால் சாயே குடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் இப்படி மில்க்மெய்ட் சாய் குடித்தபிறகு நான் சுதாரித்துக் கொண்டேன்.



ஒவ்வொரு இடங்களிலும் தரும் அளவுகளும், கோப்பைகளும் மாறுபடுகின்றன. ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கோப்பைகள், ஒரு சில இடங்களில் பீங்கான் கோப்பைகள் என்றால் கொல்கத்தா நகருக்கு வந்த பிறகு குல்லட்என்று அழைக்கப்படும் மண் கோப்பைகளில் தேநீர்!



தேநீர் தயாரிப்பதில் தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள். நம் ஊரில் தண்ணீரில் தேயிலை போட்டு நன்கு கொதித்த பின் அதில் சூடாக பால் சேர்ப்பார்கள். வடக்கில் நேர் எதிர் மாதிரி. பாலில் தேயிலை போட்டு கொதிக்க வைப்பது வழக்கம். அதுவும் ஹரியானா பக்கங்களில் தண்ணீர் விடுவதே இல்லை! அதற்கு மேல் கொதிக்கும் போது இஞ்சி தட்டிப் போட்டு, கார சாரமாக தேநீர் தருவார்கள்.

குஜராத்தில் தேநீர் கோப்பைகளில் தராமல் Saucer-ல் விட்டு அர்[dh]தி [ch]சாய்!என கொடுப்பது பற்றி வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த சமயத்தில் எழுதி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நினைவில்லாதவர்களின் வசதிக்காக அதிலிருந்து ஒரு பகுதி இங்கே....


தேநீர் அருந்த முதல் முறை நிறுத்தியபோது கிடைத்த அனுபவம் தான் இந்த அர்[dh]தி [ch]சாய்”!  அதாவது பாதி தேநீர் நமது ஊரில் கட்டிங் சாய் என்றும், மஹாராஷ்ட்ராவில் ஒன் பை டூஎன்றும் சொல்லப்படும் பாதி அளவு தேநீருக்கு இங்கே அர்[dh]தி [ch]சாய் என்று பெயர். இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு இது வழங்கும் விதம் தான் ஸ்பெஷல்!

நமது ஊர் போல கண்ணாடி டம்ளரிலோ, அல்லது மண் குடுவைகளிலோ இவர்கள் தேநீரை தருவது இல்லை இந்த அர்[dh]தி [ch]சாய்.  இங்குள்ள பலரும் தேநீர் கடைக்குச் சென்றவுடன் தனக்கு ஒரு அர்[dh]தி [ch]சாய் என்று சொல்ல, அவர்கள் கையில் ஒரு சாசரை [Saucer] கொடுத்து விடுகிறார் கடைக்காரர்.  ஏற்கனவே தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கும் தேநீரை, சாசரில் முழுவதும் விடுகிறார்.  அவரும் அதைக் குடித்து முடிக்கிறார்!  இது தான் அர்[dh]தி [ch]சாய்.

முதல் முறை தேநீர் என்று கேட்ட எனக்கு கையில் சாசரைத் தர நான் விழித்தேன்! அக்கம் பக்கத்தில் பார்த்த பிறகு எனக்கு கப்பில் அதுவும் முழு கப் வேண்டும் எனச் சொல்ல, என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு டம்ப்ளரில் விட்டுக் கொடுத்தார்.அவரின் பார்வை, என்னைப் பார்த்து தம்பி ஊருக்குப் புதுசோ!என்று கேட்பது போல இருந்தது!


சரி.... இப்பதிவின் முதல் பத்தியில் சொன்ன லிக்கர் சாய்! பற்றிய விஷயத்திற்கு வருவோம்.....  பெயர் தான் லிக்கர் சாயே தவிர இதில் சாராயம் கலப்பதில்லை. வட கிழக்கு மாநிலங்களில் சொல்லப்பட்ட லால் [ch]சாய்தான், கேரளாவின் கட்டஞ்சாயைத் தான் கொல்கத்தாவில் லிக்கர் சாய் என அழைக்கிறார்கள். கொல்கத்தாவின் ஒரு பழம்பெரும் வீதியில் தேநீர் கேட்டபோது அவர்கள் “லிக்கர் சாய்?எனக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது. லிக்கர் விட்டு தருவார்களோ என கேட்டபோது அந்தப் பெண்மணி சொன்னது – “வேணும்னா அதுவும் கிடைக்கும்!

என்ன நண்பர்களே, இந்த வார சாப்பிட வாங்க பதிவில் கிடைத்த லிக்கரை ருசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்

$
0
0


தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 9



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 12345678





எங்கள் குழுவினர் அனைவரும் கோவிலில் இருந்து வரக் காத்திருந்தோம். அனைவரும் வந்த பிறகு சொன்னது இது தான் – “நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கிருந்து 10-12 கிலோ மீட்டர் பயணித்தால் தில்லி போகும் சாலையில் இருக்கும் பாம்பே பிக்னிக் ஸ்பாட் வரும் – அங்கே தான் எல்லோருக்கும் மதிய உணவு என்று சொன்னார்கள். பாருங்க, மதிய உணவிற்காக, சிந்த்பூர்ணியிலேயே தில்லி, பாம்பே என ஓட வைத்துவிட்டார்கள்! இதுக்குத் தான் யாரையும் ரொம்ப படுத்தக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க! :)


 தாவுவதற்குத் தயாராய் இருக்கும் குரங்கார்....


பாம்பே பிக்னிக் ஸ்பாட் நோக்கி அனைவரும் பயணித்தோம். வழியெங்கும் நம் முன்னோர்களின் கூட்டம். அவர்களுக்கு சில பழங்களைப் போட ஜாண்டி ரோட்ஸ் மாதிரி தாவித் தாவி சரியாக பிடித்தார்கள். வண்டியை கொஞ்சம் நிறுத்தி அவர்களைப் படம் பிடிக்கலாம் என்றால் உள்ளே வந்து விடுவார்கள் எனத் தோன்றியது. எதற்கு வம்பு என பழங்களை போட்டுக் கொண்டே பாம்பே சென்றடைந்தோம்.... அதாங்க பாம்பே பிக்னிக் ஸ்பாட் சென்றடைந்தோம்.



 கண்களில் ஏன் கண்ணே குழப்பம்.....
பாட்டியுடன் பெட்டியை இழுத்து வந்த சிறுமி....

நாங்கள் சென்று சேர்ந்த பொழுதே நீண்ட வரிசை அங்கே. பஃபே முறையில் தான் உணவு வழங்குகிறார்கள். உணவு உண்ணுமிடம் சிறிய அளவிலிருந்ததால் பத்து பத்து பேராகத் தான் உள்ளே அனுமதி கொடுக்கிறார்கள். அதனால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் தான் எங்கள் முறை வந்தது. ஒவ்வொருவராக உள்ளே சென்று வேண்டிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு நின்றபடியே உண்டோம்.


 கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடக் கொண்டாட்டத்திற்கான அலங்காரம்.....  
பாம்பே பிக்னிக் ஸ்பாட்.


இந்த பஃபே முறையில் சாப்பிடுவது ஒரு பெரிய  கலை! ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு மற்றொரு கையால் சுக்கா ரொட்டியை சிறு துண்டுகளாக்கி சப்ஜியோடு சேர்த்து சாப்பிட நிறைய வித்தைகள் செய்ய வேண்டும்.  கரணம் தப்பினால் மரணம் என்பது இங்கும் பொருந்தும். கொஞ்சம் தவறினாலும் ரொட்டி கீழே விழும். இல்லையெனில் தட்டு சாய்ந்து சப்ஜி உங்கள் உடையிலோ, பக்கத்திலிருக்கும் நபரின் உடையிலோ படும். தட்டை வைத்துக் கொண்டு நீங்கள் திரும்பும் நேரம் பார்த்து தான் ஒருவர் அவசர அவசரமாக பாத்திரத்தினை நோக்கி அடுத்த Helping-க்காக வருவார்! தட்டு பறக்கும்!



அதிலும் சிலர் தட்டு முழுவதும் நிரப்பிக் கொள்வார்கள் – எல்லா சப்ஜியும், வேண்டுமோ வேண்டாமோ என யோசிக்காமல் அனைத்திலும் கொஞ்சம் எடுத்து அந்த சிறிய தட்டில் போட்டுக்கொள்ள அங்கே ஒரு சங்கமம் நடக்கும் – அலஹாபாத்தில் திரிவேணி சங்கமம் தான் – ஆனால் இங்கே நடக்கும் சங்கமத்தில் கலக்கும் சப்ஜிகள/உணவு வகைகள் பத்து பன்னிரெண்டு தாண்டும்! இப்படியாக கலந்து கட்டி சாப்பிட்டு, முழுவதும் சாப்பிட முடியாமல் அதை அப்படியே வீணாக்குவார்கள். பார்க்கும் போதே நமக்கு பதறும்.... எத்தனை எத்தனை பேருக்கு உணவு கிடைப்பதில்லை, கிடைக்கும் உணவினை இப்படி வீணாக்குகிறார்களே என நெஞ்சு துடிக்கும். பொதுவாகவே இப்படி இருக்கும் இடங்களில் மிகவும் குறைவாகத் தான், தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது என்பது மக்களுக்கு எப்போது தான் புரியுமோ.....



அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பயணிகள் உணவு உண்பது மட்டுமன்றி சற்றே இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாட ஏதுவாய் சில ஏற்பாடுகளும் இருந்தது. ஒட்டக சவாரி செய்யும் வசதிகளும், செயற்கை குளங்களில் படகுக் சவாரி செய்யவும், கிரிக்கெட் விளையாடும் [Bowling Machine பந்து போட நீங்கள் விளையாடலாம்] வசதியும் [Net Practice] இருந்தது. அதையெல்லாம் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு எங்கள் அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தோம். 

 குளிருக்கு இதமாய் நெருப்பின் கதகதப்பு...


அடுத்த இலக்கும் மலைப்பகுதியில் தான் என்பதால் சற்றே வளைவு நெளிவான பாதை. மாலை நேரமும் நெருங்கி வரவே குளிர் கொஞ்சம் அதிகமாக ஆரம்பித்திருந்தது. மலைப்பாதையில் சாலைகள் ஆங்காங்கே சரியில்லாதிருக்க, அதை சரி செய்ய பணியாளர்கள் இருந்தார்கள். வாகனத்திற்குள் கண்ணாடிக் கதவுகளை அடைத்து பயணிக்கும் எங்களுக்கு குளிர் தெரிந்த போது அவர்களுக்கு குளிர் அதிகமாகவே தெரியும்.  ஒரு சில பணியாளர்கள் காய்ந்த விறகுகளைப் போட்டு தீயிட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள்.



 ”மீண்டும் துளிர்தெழுவேன்” என்று நம்பிக்கையோடு சொல்லும் சாலையோர மரம்.


எத்தனை கடினமான பணி என்றாலும் வேலை செய்யத் தானே வேண்டும். செய்வது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே....  வழியில் இலைகளில்லாது பார்த்த ஒரு மரம் இவர்களை நினைவு படுத்தியது. எத்தனை தொல்லைகள் வந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என்ற அந்த மரமும் அம்மனிதர்களும் சொல்வது போல எனக்குத் தோன்றியது. 



இப்படியாக பயணம் செய்து நாங்கள் அடைந்த இடம் என்ன? அங்கே என்ன சிறப்பு என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?





தொடர்ந்து பயணிப்போம்......



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.

ஃப்ரூட் சாலட் – 132 – திருநங்கைகள் தினம் - மூன்று மனைவிகள் - மன்னிப்பு

$
0
0


இந்தவாரசெய்தி:

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னமிட்டு மகிழ்ந்த சேலம் திருநங்கைகள்

இந்த மாதத்தின் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினமாகக் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  இத் தினத்தை ஒட்டி சேலத்தில் உள்ள திருநங்கைகள் நலச் சங்கத்தினர் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவளித்தது மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கின்றனர்.  இது பற்றி தி இந்து இணைய தளத்தில் வந்த செய்தி....


சேலம் திருநங்கைகள் நலச் சங்க தலைவி பூஜா, செயலாளர் கோபிகா, பொருளாளர் ரசிகா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி திருநங்கையர் தினத்தை கொண்டாடியதோடு, ‘தூய்மை இந்தியா திட்டம்குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தனர்.

கோரிக்கை மனு

பின்னர் திருநங்கைகள் சார்பில் அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:

மகளிர் தினம், அன்னையர் தினம் என கொண்டாடப்படுவது போல் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கைகள் தினத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மூன்றாம் பாலினம் என திருநங்கைகளை அங்கீகரித்து, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். திருநங்கைகள் சமூக நல வாரியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தது.

மகிழ்வும், எதிர்பார்ப்பும்

இதுகுறித்து திருநங்கைகள் நலச் சங்க தலைவி பூஜா கூறும்போது, “தீபாவளி, பொங்கல் பண்டிகைபோல் திருநங்கைகள் தினத்தை நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். கூவகம் திருவிழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், திருநங்கைகள் தின விழா கொண்டாடுவது சிறப்பு. மற்றவர்களை போல் நாங்கள் மகிழ்ச்சியாகவும், கவலை இல்லாமல் இருக்கவும் தமிழக அரசு சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்க வேண்டும்.

திருநங்கைகள் தினத்தை ஆண்டுதோறும் வெகு விமர்சையாகவும், பிறருக்கு உதவும் வகையில் பொதுசேவையாக கொண்டாடி வருகிறோம். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோரிமேட்டில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து, விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதில் திருப்தி அடைகிறோம். திருநங்கையர் சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக இருப்பதை சுட்டிக்காட்ட தூய்மை இந்தியா திட்டப்பணியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு விழாவாகவும் கொண்டாடினோம்என்றார்.

அவர்களது இந்த சீரிய பணியைப் பாராட்டுவோம்.  சேலம் நகர திருநங்கைகள் அனைவருக்கும் நம் அனைவர் சார்பிலும் ஒரு பூங்கொத்து!

இந்தவாரமுகப்புத்தகஇற்றை:



இந்தவாரகுறுஞ்செய்தி:

மன்னிப்பு.....  தமிழ் அகராதியில் எனக்குப் பிடிக்காத வார்த்தை எனச் சொல்வதுண்டு...... இங்கே இச்சிறுவன் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்!



என்ன கொடுமை சரவணன்:

The Logical Indian’s Page என முகப்புத்தகத்தில் பார்த்தேன்.  மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமம் – தண்ணீர் கஷ்டம் நிறையவே அங்கே.தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். தண்ணீர் கொண்டு வருவதற்காகவே அங்கே ஒரே ஆண், இரண்டு-மூன்று பெண்களைக் கூட திருமணம் செய்து கொள்வது வழக்கமாம்! சா[kh]காராம் [B]பகத் என்பவர் இது போல மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டார் என்பதைச் சொல்லுகிறது அச்செய்தி. 




இந்த வார ஓவியம்:

என் மகள் சமீபத்தில் வரைந்த ஒரு ஓவியம் – முகப்புத்தகத்தில் இரண்டு நாட்கள் முன்னர் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இருந்தும், முகப்புத்தகத்தில் என்னைத் தொடராத வலை நட்புகளின் வசதிக்காகவும், ஒரு சேமிப்பாகவும் இங்கேயும்......



இந்த வார காணொளி:

ராஜஸ்தானிலும் தில்லியிலும் நிறைய பொம்மலாட்டம் பார்த்து ரசித்ததுண்டு. இது வெளி நாட்டு பொம்மலாட்டம்.....  திரைக்குப் பின்னர் நின்று கொண்டு ஆட்டுவிக்காமல் சாலையில் நடந்தபடியே......  நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!

> ഇത് നിര്‍മ്മിച്ച കലാകരന്റെ കരവിരുതിനു എത്ര ലൈക്ക് ചെയ്താലും മതിയാ
സൂപ്പര്‍.....ഇതിന്റെ പുറകിലുള്ള ആ കരങ്ങളെ എത്ര അഭിനന്ദിച്ചാലും മതി വരികയില്ല,Amazing creativity....ഇത് നിര്‍മ്മിച്ച കലാകരന്റെ കരവിരുതിനു എത്ര ലൈക്ക് ചെയ്താലും മതിയാവില്ല..ഇഷ്ടപ്പെട്ടാല്‍ ഷെയര്‍ ചെയ്യു...
Posted by Daily Indian Herald on Wednesday, September 10, 2014


 

படித்ததில்பிடித்தது:

மனிதன் ரோஜாவை பார்த்து சொன்னான் நீ தான் எல்லா மலர்களை விட அழகு... ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு !!!

கடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம் உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு !!!

குயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு!!!!

இவை மூன்றும் மனிதனிடம் சொன்னது ..

மனிதா நீ எவ்வளவு அழகு.. உன் திறமைக்கு அளவே இல்லை.. ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம் இல்லாவிட்டால் நீ இன்னும் அழகு !!!!

குறையை விட்டு நிறையை பார்த்தால் இந்த உலகமே அழகு !!!

மீண்டும்அடுத்தவெள்ளியன்றுவேறொருஃப்ரூட்சாலட்-ல்சந்திக்கும்வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி!

$
0
0


தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 10

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 123456789

 தங்க கோபுரம் - ஜ்வாலாஜி கோவில்

தொடர்ந்து பயணித்து நாங்கள் சேர்ந்த இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இருக்கும் ஜ்வாலாஜி. சக்தி பீடங்களில் ஜ்வாலாஜியும் ஒன்று. சக்தி பீடங்கள் உருவான விதம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இத் தொடரின் முந்தைய பகுதி ஒன்றிலும் சக்தி பீடங்கள் பற்றிப் பார்த்தோம்.  சதி தேவியின் உடல் பகுதிகள் வீழ்ந்த 51 இடங்களில் கட்டப்பட்ட கோவில்கள் தான் சக்தி பீடங்கள். ஜ்வாலாஜி என அழைக்கப்படும் ஜ்வாலாமுகியும் ஒரு சக்தி பீடம் தான். இங்கே சதி தேவியின் நாக்கு விழுந்ததாக நம்புகிறார்கள். 



நாங்கள் பயணித்து ஜ்வாலாஜி கோவில் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தபோது மாலை நேரமாகி விட்டது. சற்றே மலைப்பாங்கான பகுதி – அடிவாரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு, நடந்து தான் செல்ல முடியும். அப்படி ஒன்றும் அதிக தொலைவில்லை – ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். எல்லோ கோவில்களில் இருப்பதைப் போலவே இக்கோவிலுக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் நிறைய கடைகள். தேவிக்குச் சமர்பிக்கத் தேவையான பொருட்களை சிலர் விற்க, பலர் அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் வைத்திருந்தார்கள்.

கடைகளைப் பார்த்தபடியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். பிரசாதக் கடைகள் அனைத்திலும் வாசலில் ஒரு நபர் நின்று கொண்டு கோவிலுக்கு வருபவர்களை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டிருந்தார்கள். காலணிகளை இங்கே வைத்து விட்டு தேவிக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என பலரும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.  பக்தர்களின் வருகை குறைந்திருந்த காரணமோ என்னவோ, பலத்த போட்டி இருந்தது.


அதிலும் நாங்கள் பதினான்கு பேர் என்பதால் நல்ல வியாபாரம் நடக்கும் என நினைத்தார்களோ என்னமோ?  நடக்கும் அனைத்து விஷயங்களையும் பார்த்தபடியே மேலே நடந்தோம். கோவில் படிகளுக்குச் சற்று முன்னர் இருந்த கடையொன்றில் காலணிகளை வைத்து விட்டு அர்ச்சனைத் தட்டுகளை வாங்கிக் கொண்டு மேலே நடந்தோம்.  கோவில் வளாகத்திற்குச் சென்றபோது நடை சார்த்தி இருந்தது தெரிந்தது.

வட இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில் மாலை நேரத்தில் ஆரத்திஎன்று அழைக்கப்படும் நிகழ்வு ஒன்று நடக்கும். ஆறரை அல்லது ஏழு மணிக்கு கோவிலில் இருக்கும் அனைத்து இறைவன்/இறைவிகளுக்கும் கற்பூர ஆரத்தியும், பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். அதற்காக அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நடை சாற்றப்பட்டு தயார் செய்வது வழக்கம். நாங்களும் சென்றது அந்நேரத்தில் என்பதால், கோவில் திறக்கும் வரை அங்கே அமர்ந்திருந்தோம். 

அனைவரும் பேசிக் கொண்டிருக்க, எங்கள் குழுவில் இருந்த பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.  கோவிலில் இருந்த பலரும் லௌகீக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தினார்கள்.  இப்படி பேசிக் கொண்டிருப்பதால், கோவிலுக்கு வந்த பின்னும், பலரும் தேடும் அமைதி கிடைப்பதில்லை! பாராயணம் முடிப்பதற்கும் கோவில் கதவுகள் திறந்து ஆரத்தி தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.

இங்கே தேவி அக்னி ரூபத்தில் இருக்கிறார்.  பாறைகளுக்கு இடை இடையே ஒன்பது இடங்களில் ஜ்வாலையாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஜ்வாலையையும் மஹாகாளி, அன்னபூர்ணி, சண்டிதேவி, சரஸ்வதி, துர்க்கா தேவி, லக்ஷ்மி என வணங்குகிறார்கள்.  பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டிருக்க உள்ளே நீல ரூபத்தில் எரிந்து கொண்டிருப்பது மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமாய் அன்னபூர்ணி. பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா, சண்டி தேவி. பக்கத்தில் மா ஹிங்க்லாஜ் தேவி [சர்வ வ்யாதிகளுக்கும் நிவாரணம் தருபவள்], விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்க்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம்.


அனைத்து தேவிகளையும் இங்கே ஜோதி ரூபமாக வழிபடுகிறார்கள். பாறைகளுக்கு நடுவிலிருந்து வரும் ஜ்வாலை எங்கிருந்து வருகிறது, அதற்கு என்ன காரணம் என சிலர் சோதித்துப் பார்த்தாலும்அதற்கான காரணம் தெரியவில்லை. ONGC நிறுவனம் கூட சில சோதனைகளை மேற்கொண்டு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.

அக்னி ரூபமாக தேவியை தரிசித்து விட்டு சில படிகள் மேலே சென்றால் அங்கே பாபா கோரக்நாத் கோவிலும் இருக்கிறது. இங்கேயும் பாறைகளில் அக்னி பிழம்புகள்.  ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து அந்த அக்னிப் பிழம்புகளை மூட, சிறிது நேரத்தில் குடத்திலிருக்கும் தண்ணீரும் கொழுந்து விட்டு எரிகிறது. அதை அணைத்து விட்டு, அதே தண்ணீரை நம் மேல் தெளித்து, அதையே நமக்கு தீர்த்தமாகவும் அளிக்கிறார்கள்.

இன்னுமொரு சிறிய குகையில் பாறைகளுக்கு இடையே நீரோட்டம். ஒரு சிலரே அங்கே நின்று தரிசனம் செய்ய முடியும் என்பதால் நான்கு ஐந்து பேர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தபிறகு அடுத்த ஐந்து பேர். எங்களில் ஒருவர் ரொம்பவும் குனிந்து பார்க்க, அங்கே இருந்தவர் நகர்ந்து கொள்ள மறுபடி மறுபடி சொல்கிறார். ரொம்பவும் அருகில் சென்றால் முகத்தில் அக்னி பட்டு விடும் அபாயம் உண்டு என்று சொல்ல, அதை எங்களால் நம்ப முடியவில்லை.  ஆனாலும், அந்த நீரோட்டத்தில் அக்னி ஜ்வாலையை காண்பிக்க, இரண்டு, இரண்டரை அடி உயரத்திற்கு அக்னி ஜ்வாலை எழுகிறது. அதன் பிறகு தான் அவர் சொன்னதன் காரணமும் புரிந்தது.

இப்படியாக ஜ்வாலா ரூபமாக இருக்கும் தேவியினைத் தரிசனம் செய்த பிறகு வெளியே வரும்போது நன்கு இருட்டி விட்டது. கோவிலுக்குள் புகைப்படங்கள் எடுக்கத் தடை என்பதால் படங்கள் எடுக்க இயலவில்லை. வெளியே வரும்போது சில படங்கள் எடுத்தேன். இக்கோவில் பற்றிய நிறைய செய்திகளும் கதைகளும் உண்டு. முகலாயப் பேரரசர் அக்பர் அவர்கள் இக்கோவிலுக்கு தங்கத்தில் Chattra [குடை] கொடுத்ததாகவும் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தில் தகடுகள் பொருத்தியதாகவும் செய்திகள் உண்டு.  

நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் இடம் இது. அக்னி ரூபமாக தேவி இருப்பதாகச் சொன்னாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. கோவிலின் உள்ளே இருக்கும் போது கண்டிப்பாக Positive அதிர்வலைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு இடமும் கூட.

சக்தி பீடங்களில் ஒன்றான ஜ்வாலா தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றான கழிப்பறை வசதிகள் இவ்விடத்திலும் உண்டு. அதுவும் குளிர் தேசத்தில் இப்படி வசதிகள் இல்லாதிருப்பது அங்கே வரும் அனைவருக்கும் கடினமான ஒரு சோதனை! கழிப்பறை என உள்ளே ஒரு இடத்தினைக் காண்பிக்க, நான் அங்கே சென்று “நான் இந்த விளையாட்டுக்கு வரலைஎன்று திரும்பி ஓடி வர வேண்டியிருந்தது!

ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

சாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ!

$
0
0


சுடச்சுட மோமோ..... 

தில்லியின் பிரதான நொறுக்குத் தீனியாக இருந்த சமோசா, கச்சோடி, பானிபூரி, தஹி பல்லா-பாப்டி போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை வெற்றி கரமாகப் பிடித்திருக்கிறது மோமோ! அதுவும் சமீப காலங்களில் எங்கே பார்த்தாலும் மோமோ கடைகள் – மாலை நேரங்களில் ஒரு சிறிய மேஜையை நடைபாதைகளில் போட்டு, அதன் மேலே ஒரு ஒற்றை கேஸ் அடுப்பு, மோமோ சூடாக்க ஒரு பாத்திரம், ஒன்றிரண்டு குப்பிகளில் சாஸ், சட்னி, பேப்பர் ப்ளேட்டுகள் வைத்து கடை ஆரம்பித்து விடுகிறார்கள். 



மாலை நேரங்களில் மட்டும் முளைக்கும் இக்கடைகளுக்கு இருக்கும் வரவேற்பு அமோகமானது. ஒவ்வொரு தில்லி வாசியும், குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்/சிறுமிகளும் அம்மா/அப்பாவிடம் Pocket Moneyவாங்கிக் கொண்டு போவதே இந்த மாதிரி மோமோ வாங்கிச் சாப்பிட என்று ஆகிவிட்டது. இரண்டு மூன்று மணி நேரத்தில் கொண்டு வந்த அத்தனை மோமோவும் காலியாகி விடுகிறது. ஒரு சில இடங்களில் வரிசையாக மூன்று நான்கு கடைகள் கூட உண்டு. அனைத்திலும் விற்பனை ஆகிவிடுகிறது என்பது தான் கூடுதல் சிறப்பு.



அது என்ன மோமோ! அது சைவமா, அசைவமா? மோமோ என்பது ஒரு திபெத்தியன் உணவு. நம் ஊர் கொழுக்கட்டை போல ஒரு உணவுப் பண்டம். பொதுவாக வேக வைத்து சாப்பிட்டாலும் சிலர் எண்ணையில் பொரித்து எடுப்பதும் உண்டு. கொழுக்கட்டை போலவே மாவின் உள்ளே முட்டைக்கோஸ், இறைச்சி போன்றவற்றை வைத்து வேக வைத்து தருகிறார்கள். திபெத் உணவு வகை என்றாலும் நேபாள், வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இந்த உணவு பிரபலமாகி விட்டது.



தில்லியில் இந்த மோமோக்கள் விற்பனை செய்வது ஒரு பெரிய குடிசைத் தொழிலாக மாறி இருக்கிறது. Chirag Delhi” எனும் தில்லியின் ஒரு பகுதியில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலர் இதை தயாரித்து தில்லியின் பல பகுதிகளுக்கும் அனுப்புகிறார்கள்.  Half BoiledMomo வாங்கிக் கொண்டு அதை சுடச் சுட வேக வைத்து தருவார்கள். முன்பெல்லாம் நேபாளிகள், வடகிழக்கு மாநிலத்தவர்கள் மட்டுமே விற்பனை செய்து வந்ததெல்லாம் மாறி விட்டது.அனைவரும் மோமோ விற்க ஆரம்பித்து விட்டார்கள்.



சிராக் தில்லி பகுதியில் பல வடகிழக்கு மாநிலப் பெண்களிடம் தேவையான பொருட்களைக் கொடுத்து, செய்து தர கூலியாக ஒரு மோமோவிற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என தந்துவிட, அவர்கள் நாளொன்றுக்கு 100, 200 என தயாரித்துக் கொடுக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே இப்படித் தயாரித்துக் கொடுக்க, அவர்கள் வீட்டு வேலையும் செய்து கொண்டு பணம் சம்பாதிக்க முடிகிறது. அதை எடுத்துக் கொண்டு வந்து தில்லியின் பல பகுதிகளுக்கும் விநியோகம் செய்து சம்பாதிக்கிறார்கள் பல வியாபாரிகள்.



தில்லியில் இப்படி மோமோ சாப்பிட வாய்ப்பிருந்தும் அது விற்கும் இடத்திலிருந்து வரும் வாசம் பிடிக்காத காரணத்தினாலேயே சாப்பிட்டதில்லை. சாப்பிடத் தோன்றியதும் இல்லை! சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் சென்ற போது பல இடங்களில் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக சைவ உணவு! அசாம் மாநிலத்தில் தேஸ்பூரிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் “தவாங்செல்லும் போது வழியில் வெகு தூரத்திற்கு உணவகங்களே கிடையாது! வழியில் இருக்கும் சின்னச் சின்ன கிராமங்களில் தேநீர் [லால் சாய்!] குடிக்கும் இடங்களில் மோமோக்கள் மட்டுமே கிடைத்தன!

 பசி சமயத்தில் இங்கே தான் அன்னபூர்ணி எங்களுக்காக கடை வைத்திருந்தார்.

காலையில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் ஏழு மணிக்கு மூன்று சப்பாத்தி சாப்பிட்டது. மதியம் இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. உணவகம் கண்ணில் தென்படவே இல்லை! ஓட்டுனரிடம் எங்கேயாவது சாப்பிட நிறுத்தச் சொல்ல, உணவகம் என்று ஏதுமில்லை, வேண்டுமெனில் மோமோக்கள் கிடைக்கும்எனச் சொல்லி வழியில் ஒரு இடத்தில் நிறுத்தினார். அங்கே ஒரு சிறிய கடை. கடையை நடத்துவது ஒரு பெண். அவரிடம் கேட்க, Veg Momo மட்டும் தான் இருக்கிறது! பத்து நிமிடம் காத்திருந்தால் சூடாகத் தருகிறேன் எனச் சொல்ல, உடனேயே நான்கு ப்ளேட் மோமோ சொல்லி விட்டோம்!

சுடச் சுட மோமோ வர கூடவே மிளகாய்ச் சட்னியோடு மோமோவை உள்ளே தள்ளினோம்.  இருந்த பசிக்கு மோமோ அம்ருதமாக இருந்தது! இந்தப் பயணத்தில் தான் முதன் முதலாக மோமோவை சாப்பிட்டேன். அதற்குப் பிறகு பயணத்தில் பல இடங்களில், உணவு கிடைக்காத போது மோமோ தான்! வயிற்றுக்கு ஒன்றும் தீங்கு விளைவிக்கவில்லை என்பதும் அதைச் சாப்பிட ஒரு காரணமாக இருந்தது! சரி இந்த மோமோவை எப்படிச் செய்கிறார்கள் எனத் தெரிய வேண்டுமா?

இணையத்தில் நிறைய தளங்களில் இதை எப்படிச் செய்வது எனச் சொல்லி இருக்கிறார்கள். காணொளிகளும் இருக்கிறது! மாதிரிக்கு சில கீழே!




தமிழகத்திலும் சென்னை போன்ற இடங்களில் மோமோ கிடைக்கிறது என்றாலும் மற்ற இடங்களில் கிடைப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டுப் பாருங்களேன்!

உணவே கிடைக்காத போது தான் இது போன்று சாப்பிடாத உணவு வகைகளையும் சாப்பிடத் தோன்றுகிறது! வயிற்றுப் பசிக்கு எதையாவது உள்ளே போட்டுத் தானே ஆக வேண்டும்!

அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
Viewing all 3194 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>